வெள்ளி, 28 டிசம்பர், 2018

கடந்தவள் காதலி



சேரா துகல்களை சேர்த்து மைக்கும்,
பேரலையின் சிறு விளைவாய் !

என் வாழ்வின் சிற்றஞ்சிறு,
மகிழ்வினைகளையும் தலைக்கோதி கோர்த்தவளே !

சீரிய சண்டைகளை சிறுவிசையாக்கி,
கூரிய கோபமதை வீரியமற்றதாக்கி,
என் பாழான சொற்களை பகுபதமாக்கி,
என் வளர்ச்சி கண்டவளே,
என்னை காதலனாய் கொண்டவளே;

இந்நிலை வரை நான் கண்டும்,
கண்ணீர் காணாத கன்னங்களில்,
மயிர் வளர கண்ணீர் தெளித்த,
என் கடவுச்சொல்லே...

என்னை கடந்ததேனோ ?

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 20 நவம்பர், 2018

என் முதல் கவிதை

முதல் காதலென நான் கிறுக்க,

கிறுக்கலில் உன் நகத்தடம் கீரிக்கிழிக்குமுன்,

வியர்த்து நின்ற ஒற்றை நொடியை இன்றும் நான் மறவேன் !

பிரித்து சிரித்தாயோ, சிரித்தே பிரித்தாயோ;

என்றறியும் முன்னமே என் முகவரி மாரிட,

ஆயிரம் கவிபடித்தும் உன் முதல்கவி என் கிறுக்கல்,

என்றெண்ணி நகர்ந்தாலும்,

தூரா மேகத்தில் துளியேற்றும் காற்றாய்,

காற்றற்ற அறையில் பறக்கும் காகிதமாய்,

நீரற்ற குடுவையில் கரையும் சிறுகல் நான் !

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

இதய துடிப்பு


நாடி வழியோடும் உதிரம் பிரிக்கும் மின்சாரமாய்,
நின் சாரம் என் குருதியோடையில் போதை ஏற்றிட ;
ஏறும் போதை சீரும் செறுக்கில்,
நரம்பின் வரம்புகள் கடந்து கிழித்திட,
கிழியல் அடைக்கும் தட்டனுவில்,
உரிமை கோர உன் பெயர் கிறுக்கினேன் !

நின்பெயர் பதித்த தட்டனு தகர்ந்து,
தகர்வின் நகர்வில் இதயம் அடைந்திட,
துடிக்கும் துடிப்பிலும் துயிலாமல் துயர்ந்தேன்,
உன் நெஞ்சக குழியின் புதையலாய் !


#வினித்_மணிமாறன்

திங்கள், 8 அக்டோபர், 2018

மழை



ஈரத்துளிகளின் இசைவில் இசை சேர்த்து,

மூடிய சன்னலிற்சாய்ந்து மூடா கண்களோடு,

நகரும் நகரத்தில் கொஞ்சிக்குளவும் காதலுக்கு,

இச்சிறு துளியும் இச்சை தீர்க்கும் !

பறக்கும் தூசியை தன்பால் கவர்ந்து,
உருவான உறவாம் மண்ணில் சேர்த்து,

அவை சேர்ந்தநொடி கண்ணீராய் சேராகி !

உலர்ந்து மீண்டும் மேகமாகும் காதற்கரைப்பான் ~ மழை !

#வினித்_மணிமாறன்

புதன், 3 அக்டோபர், 2018

அந்நிய பார்வை

அந்தி வானடக்க, வாடையின் வலுகிறுக்கும்,
வரியற்ற வெண்பாக்கள் பெண்பாலின் கண்விளக்க,

சிரித்து சிறைப்படுத்தும் சிறியாளின் செவிதழ்கள்,
அவள் முறைத்தாலும் வழக்கிழுக்கும்,

பல்வரிசை பதன்படுத்த,
மொழி திரட்டும் பல் இடுக்கில்,
பன்மொழியும் பழமொழிதான் !

இமை வலைந்து வழிவகுக்க,
அவ்விடங்காட்ட புள்ளியிட்டு,
சின்னஞ்சிறு கோலமது,
என்னை சிக்கவைக்கும் சிறுபொறிதான் !

கண்ணிமைக்கும் நொடியதினில்,
இவ்வனைத்தும் நான் கடக்க,
செந்தமிழின்  விழித்திரைக்கு,
நானும் அந்நியன் தான் !

#வினித் மணிமாறன்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

ஒன்றான ஒரு நொடி

இரவோடு உறவாடி, நிலவொளியின் குளிரளந்து ;
நிலவொலிந்த வேலையிலும், கண்ணிமைக்கா கைபேசி !

என் எழுத்தெல்லாம் அவளிருக்க;
அம்முகம்,
நிதனித்தம் நினைவிருக்க;
எழுந்தெழுந்து நான் கிறுக்க;
கசிவுண்ட பேனா முனை,
என் கண்கசிவை காணாதேனோ !

விடிந்தும் தூங்காமல்,
விதியென ஏங்காமல்,
என் சதியை காணாமல்,
வீழுந்திரந்து போனாலும்,

மண் மசைக்கும் முன்னாலே,
என்னை பெற்றவளின் கருநகலே,
உன் மடிகடத்தி நான் கிடக்க,
இடிகடந்து நீ இறைக்க,
என் உயிர் கடக்கும் ஒருநொடியும்,
ஒன்றான ஓர் நொடிதான் !

#வினித் மணிமாறன்

திங்கள், 24 செப்டம்பர், 2018

இதுவும் கடந்து போகும்




சிற்றலையில் நம்கால் நனைக்க,

சிறுகுடையுள் கை பிணைத்து,

கடல்மண் மெத்தென ஒரு கால் விழுங்க,

என் மறுகால் கிறுக்கும் ஒரு மீீமிசை நீ !

அலை அடித்து அழித்தாலும்,

அழித்தடம் மாறும் முன்,

என் வழித்தட பயணத்தின்,

ஜன்னல் ஓர நொடிகளில்,

மின்னல் தோன்றா இடி முழக்கம் நீ !

கடக்கும் கடினமான கடிகார நொடிகளில்...

ஒவ்வொரு நொடியும் நொடித்தாலும்,

உன்னை கடியாத கவிஞன் நான் !

#வினித்_மணிமாறன்

புதன், 19 செப்டம்பர், 2018

கண் மை




கண்டதும் கவிழ்க்கும் பார்வையை,

கவிக்க தெறியாத கவிஞனுக்கு;

கவி புலப்பும் அட்சய பாத்திரம் !

~ கண் மை

#வினித் மணிமாறன்

திங்கள், 30 ஜூலை, 2018

தாலாட்டு


தூளியில் நான் துள்ள,
என்னை அடக்கி ஆள,
மீட்டப்படும் அடுக்குமொழி கவிதை ;

பொருள் உணரா அகவையிலும்,
நான் அகப்பட்ட இசையற்ற விசை ;

அலுவல் இருந்தும்,
மூர்த்தோன் அழுவல் இருந்தும்,
என் அழுகையே அவள் அழைப்பொலியென ,
பதண்டும் பிதற்றாத பி.சுசீலாவின்,
ஆஸ்கார் பாடல் ;

மாறாத குரலில் பாடும் இவள்,
சுருதியை - யார் மகள் என்பாள்,

கோடி கேட்டும்,
தேடியும் கிட்டாத,
சோடி பொருள்,
என்னன்னையும் தாலாட்டும்...

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 24 ஜூலை, 2018

காவிரி மைந்தன்





பாலனாய் - கரைகண்ட காவிரியின் நுறைகண்டு சிரித்து,

மீளியாய் - கலங்கிய நீர் தெளிய; தெளிந்த நாள் உடல் நனைத்து,

நீச்சல் அறிய அந்நீரில் எந்தகப்பனோடு நான் ஊற,

உக்கிரம் தீரா காவிரிக்கு பயந்து, 

எம்மையவள் அதட்டி அழைக்க, கரையடைந்து;

ஈரம் உலர்ந்த பின்,

குட்டிக்கரணம் செய்கையில் நான் மறவோன்,

திறவோன் ஆகி விடலை அடைந்தும் அதை விடாத இளம் காளை,

இன்று முதுமகனாகி;

கரைகண்டும் கரையா நினைவுகள் மீண்டும் கிடைத்திட,

விடலையிலே விடாமல் வாழ்ந்திருக்க விழைகிறேன்...

#வினித்_மணிமாறன்


பொருள் விளக்கம்

ஆண்களின் ஏழு பருவங்களும் அதற்குள்பட்ட அகவையும் :-

பாலன் 1 - 7
மீளி 8 - 10
மறவோன் 11 - 14
திறவோன் 15ஆம் அகவை
விடலை 16ஆம் அகவை
காளை 17 - 30
முதுமகன் 30ஆம் அகவைக்கு மேல்

புதன், 18 ஏப்ரல், 2018

ஆசிபா


அம்புவி கண்ட அறும்பவளை, அவராகமின்றி ;

அவரசையை ஆடைகளைந்த காமரக்கன்,

வைத்திய முறையில் அவத்தியமேற்றி,

கண்வருடா வன்புணர்வேற்றி,

கருக்கானா கண்மணியை கற்பழித்து உருகளைத்து ;

கருவறையிலிருந்து,

எமனறை சேர்த்து வைக்க,

எவனடி நினைந்திருப்பான் !

அவள் அசிதன் அறிந்த நொடி,

அக்குருவிலும் ரத்த நெடி ;

அவளசிதன் நான் இல்லை,

என் தமக்கை அவளும் இல்லை,

இருந்தும் இந்த நொடி,

நான் இருந்தென்ன பயனென்றெண்ணியனேன் ?

இம்முறையும் எம்முறையும் இவ்வவத்தியம் செய்தானை,

எம்மகனாய் இருந்தாலும் புணருறுப்பருப்பேனென,

சூழரைகட்டும் ஆண்மை !

#வினித்_மணிமாறன்

தமிழ் அறிக

அம்புவி ~ உலகம்
அவராகம் ~ இச்சையின்மை
அவரசை ~ தங்கை
அவத்தியம் ~ குற்றம்
அசிதன் ~ தகப்பன்
அக்குரு ~ விரல் நுனி

புதன், 28 மார்ச், 2018

பெண் பாரதி


அவள் இருப்பிடம் தேடும் கண்கள்,

அவள் நாற்காலியில் உறங்கிட,

நிமிரா மங்கையை நிமித்தமும் தேடினேன்,

திருட்டும் கற்றேன் அவள் அலைபேசி அடைந்திட,

தேடிக்கண்டேன் தேன்தமிழின் பிரியாளை,

பாரதியின் சிறையாளை,

முண்டாசின் வரியவள் முகவரி,

வெண்காசின் நிறம் அவள் முக ஒளி,

உவமம் பிதற்ற; பிறை திரை சேர,

விடைபெறும் நாளின், விடியலில் உணர்ந்தேன்,

விதியவள் தன்பாதியை பகிர்ந்தவள் என்று !

இருந்தும் மகிழ்ந்தேன்,

மலையேறிய காதல் அவள் செவியேறிய படியால் !

#வினித் மணிமாறன்

வெள்ளி, 23 மார்ச், 2018

காற்சட்டை காதல்


அவள் கண் படாத தலைமறைவு,

தகர்ந்திட, பலமுகம் வருடி என்னை திருடும்,

காலம் காணாத கட்புல வருடி அவள் !

கண்டகணம் மனம் புலவும்,

அம்மாவாசையின் செந்நிலவு !

உடல் பூட்டிய கடல் காதல்,

காற்சட்டை கிழித்தையல் வழி கசித்திட,

மிரட்டி உருட்டும் தோரணைத்தான் 

விரட்டி இழுத்ததோ,

இந்த காற்சட்டை காரணை ?

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 18 மார்ச், 2018

நிரல்யா - எம்மகளின் கனவு



அன்னையின் கை தலையனையாக்கி,

கண்ணயர்ந்த நிரலின் நிழல் கனவுகள்,

கற்பனை கனவிலும் சித்திகரிதாய் சித்தப்பனை,

சித்தா என்றழைக்க தனிச்சிறசு நான் தரித்தேன்,

நீ பல்துலக்க என் கைபேசி கண்ணாடி,

நின் சுமந்து நான் நடக்க,

கடும் கோடையும் என் ஆடி,

உன் ஆசைகள் நிறைவேற,

மழலை மொழியில் நுரையேற,

மிதந்ததும் பறந்தது என் நாட்கள் !

நீர் குமிழியின் நிரமாற்றமாய்;

கடந்த மழலையும்,

என் மடியில் நீ கிடந்த நிழலையும்,

பிடிக்க முயன்ற பொழுதெல்லாம்

சுழற்ற முயன்றும் சுழல்கிறேன்,

காலமெனும் சக்கரமாய் !

#வினித்_மணிமாறன்

வியாழன், 15 மார்ச், 2018

விண் பொட்டு


நின் கண்ணிமைக்க கருமை அழகு,

பச்சையுடுத்தும் முழுமை அழகு,

சிரித்தால் மிளிரும் விண்பொட்டுகளால்,

உன்பெயர் பரணி என்றெழுத்தினானோ பிரம்மன் !

முதல்நாள், கர்வத்தின் காட்சி இவளென்றும்,

இதழ் கேட்க, என் சர்வத்தின் சாட்சியம் இவளென்றும்,

நினைத்து சுழன்ற நாட்கள்,

கடந்தும் நடந்ததுதான்;

பணிப்போர்த்தி உறையும் குளிரில்,

உறங்காமல் உரைத்த காதல்,

பலபிறை கடந்தும் தேயாதிருக்க,

நிலவை நான் அடைந்தும்,

பிளவா தென்றுரைப்பேனே !

#வினித்_மணிமாறன்

புதன், 7 மார்ச், 2018

பெண்கள் தின வாழ்த்துகள்


பேதையாய் செல்லம் பெற்று,

பெதும்பையாய் அடக்கம் கற்று,

மங்கையாய் நாணம் பெற்று,

மடந்தையாய் மானுடம் மயக்கி,

அரிவையாய் கற்று தேர்ந்து,

தெரிவையாய் பெற்றோர் பிரிந்து,

பேரிளம்பெண்ணாய் பெற்றவளாகும் ;

தாய்க்கும் தங்கைக்கும், தோழிகளுக்கும்,

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 6 மார்ச், 2018

கார்மேகம்


மாலை வெயிலின் சாயம் ஏற்று,

நிலவவள் சினுங்க; சிவப்பு கம்பளம் சாற்றி,

நிலவு குடி பெயர,

அவளது போர்வையாய், புடவையாய்,

அழகிற்கழுகு சேர்த்து,

கவிக்கு எட்டாமல் நிலவு மறைகையில்,

மோகமும் கவித்தாகம் தீர்க்கும் !

புவிக்காதல் சோடிகள் நிலவை செரித்து,

களவை கொரிக்கக் காரணி நிலவானால்,

கவி எழுதும் காகிதம் இவனென்பேன்,

பிறர் இறுக்கம் தீர்க்க இவன் தன்சதை பிழிந்தாலும்,

ஒற்றை ஆணாய் எண்திசையும் காதலை தேடும் காதலன் ~ கார்மேகம்

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 2 மார்ச், 2018

கிழக் காதல்


புடைத்து வரம்பு மீறிய நரம்புகள்
தளர்வுற்று அதிர்ந்திட,

காகிதத்தில் தவழும் பேனாமுனை
இவளது இதயமின் அலைகளை வரைகிறது,

தவழும் பேனா இவள் அழகில் தழுவ,

கிழவனின் கைநாட்டும் கவிதையாகிறது,

ரேகையை இவள் கன்னம் மழுக்கியதால் தானோ !

#வினித்_மணிமாறன்

வியாழன், 1 மார்ச், 2018

பாலைவனம்


பாலை வெயிலின் மணல்துகளாய் மனம்,

உராய்ந்து தேய;

காணும் இடமெல்லாம் அவளது  காட்சி - பிழை !

மதிக் கிளரும் நிலவின் முதிர்ச்சி ,

பதியும் கிரணத்தால் பிதற்றாமல் வருடி,

சென்ற வழியெல்லாம் நிலவும் செப்பளிட !

இதயம் உரைக்கும் பெயரை விழி தேடுகிறது,

குடுவையை  ஏகக்கவிழ்த்தும் அகதியான கடைத்துளி நீராய்,

காலனி தேயும் வரை காத்திருந்து,

அடிவழியேறும் கல்லும் குத்தி காட்ட,

கசக்கிய பணயசீட்டு இப்பொழுது பயணற்ற பயணசீட்டாகிறது !

சிக்கி சிதறும் மனம் அவள் வருகைவரை காத்து,

சிதைவு தவிர்க்க பதமியுண்கிறது !

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பாரிஜாதம்


கதிரவன் கதிர் முற்ற,

கருகா தேகம், வாடினாலும் ;

அவள் அழகு வாடாமல்லி !

காரிருள் வான் கவிழ்க்க,

உலகம் கண்மூடி வீண் கழிக்க,

இதழ் நுனி முத்தமிட்டு,

மொட்டாய் முகம் சுழிக்க,

அவள் அழகை விழி களிக்கும்,

களித்த விழி போர் தொடுக்கும்;

இவன் நெஞ்சை பெயர்த்தெடுக்கும் !

காதல் போதை ஏற ,

பேதை முகமுவமி,

கற்பனையில் இயற்றினாலும்,

பெயர் மட்டும் தெரிந்த,

பாரிஜாதம் என்னவள் தான் !

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

தனித்த காதலர் தினம்

முன்பெழுதிய கவிதையின் ஆழம் ,

அடுத்த பக்கம் பதிந்தாலும் ,

அதை படிக்காமல்,

எழுதி தேய்ந்த பேனா முனை,

காகிதத்தை கீராமல் தடவி மொழுவ;

வடிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விடியலை தேட !

கிடப்பில் கிடந்த ஆசைகள் யாவும் அசைக்க நினைக்கிறது,

இருந்தும் அசையா விசையாய் திசையெட்டும் தேடுகிறேன் ,

அவள் கடல் கடந்தாலோ;

நான் அவள் கடல் கடந்தேனோ !

என்று கடைந்தும், கடையா பதிலின் கேள்வியாய் நிற்கிறேன்....

இவ்வாண்டும் காதல் அற்ற காதலர் தினத்தில் !

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

யார் அவள்

காதல் தேக்கி, அதில் காந்தம் ஏத்தி !

காரிருளிலும் என் போர்வைக்குள் விளக்கேற்றி,

என் கைகோர்க்கும் கோர்வையாய்,

என்னை கைதாக்கும் பார்வையாய் !

என் கை தாக்கும் கடவுச்சொலாய் !

கரு மை பூசிய கருமையாய்  !

என் கண் மூட,

செந்திரையில் மிதக்கும் செல் சொல்லும் ;

கவிதை பெட்டகத்தின் அள் அவள் !

அள் ~ பூட்டு

#வினித்_மணிமாறன்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

பகிரி

பகிரியில் எட்டாம் நிமிடம்,

நான் அழிக்க நினைத்தும்,

எட்டாத குறுந்தகவல் ~ நீ

#வினித்_மணிமாறன்

குளிர்

சாலை நெருக்கத்தில்,

நடுங்கும் குளிரில்,

போக்குவரத்து சமிக்ஞையின் முன் நிற்க,

கனரக வாகனம் தரும் இதச்சூடு ~நீ

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

உவமை ஹைக்கூ


மொழியில்லா கவிதையில்

மௌனமான உவமை ~ அவள்


#வினித்_மணிமாறன்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

குழந்தையின் சிரிப்பு ஹைக்கூ



சம்பந்தம் இல்லாத குழந்தையின் காரணமில்லாத சிரிப்பு

~அவள்


#வினித் மணிமாறன்

தாலாட்டு ஹைக்கூ



எனக்காக பிரம்மன்,

இரண்டாம் அலைகற்றையில் பதிவிறக்கம் செய்த தாலாட்டு

~நீ


#வினித் மணிமாறன்

வியாழன், 25 ஜனவரி, 2018

நிலவின் கோவம்



யௌவனம் கடந்தும் உன் மனதின்,

நிறை பொருளாய் நான் வேண்டும் !

கடை காற்று நான் இழுக்க,

கடை பார்வையாய் என் காதல்,

நீ வேண்டும் !

நாள் கடந்து வாழ்ந்தாலும்,

நான் கடக்க வாழ்ந்தாலும்,

நாணலின் அகராதி,

என் நாள் காட்டியாய் நீ வேண்டும் !

பிறைக்கும் கரையுண்டு அழகில் குறையுமுண்டு,

பௌர்நமி இரவிலும் என் நாளை இருடாக்கியது போதும்,

நிலவே தலை காட்டு....


#வினித் மணிமாறன்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வலி ஹைக்கூ


நூறு படி நான் ஏற,

கடை படியில் என் மூட்டு அடையும் கடை வலியின் நுனி சுகம்

~ நீ

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தும்மல் ஹைக்கூ


தூங்கா இரவில்

துன்புறுத்தும் பினியில்,

தும்மல் முற்ற;

நான் ஒரு நொடி அடையும் தற்காலிக சுகம் ..

நீ !


#வினித் மணிமாறன்

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பேசா காதல்


வெண் பனியில் நான் உறைந்தும்,

என் பணியில் நாள் நிறைந்தும்,

பேசும் ஒரு நொடியில் அவள் வார்த்தை,

என்னகரஞ்செய்யும் முதல் அறம் !

பேசா நாட்களில் கவியவள், கண்

காணாத என் வாழ்வு;

அனல் குவித்து புனல் ஏற்றி,

என் புலம் எரியவள் தூற்ற

காற்றில் கரித்துண்டுகளாய் கரையும் காகிதம் ~ நான்


#வினித்_மணிமாறன்

செவ்வாய், 2 ஜனவரி, 2018

நகரத்து நிலவு


நகரம் அவள் அழகை ரசிக்க மறுத்தும்,

நகரத்து நிலவு நகர மறுக்கிறது,

கண்ணருகே பலரும்,

கைபேசியில் காதலாடி கவிழ்ந்து பேச,

கைபேசி கண்ணயர்ந்தும் அவளை கவிழ்க்க முயன்றவன்,

மகிழுந்தின் மழைச்சாரல் மறைக்கும் கண்ணாடியை மடியமர்த்தி,

நித்திரை கொள்கிறான்,

சுற்றம் காதலில் கரைத்தேட,

கடந்த காதல் கடையக் கடிகிறது,

காலங்கண்ட கவிநிலவின் கதிரீர்ப்பாய்,

கரையொதுங்கும் குறையுடை நுரைக்குமிழி நான் ....


#வினித் மணிமாறன்