நரம்பின் வரம்புகள் கடந்து கிழித்திட,
உரிமை கோர உன் பெயர் கிறுக்கினேன் !
தகர்வின் நகர்வில் இதயம் அடைந்திட,
உன் நெஞ்சக குழியின் புதையலாய் !
அந்தி வானடக்க, வாடையின் வலுகிறுக்கும்,
வரியற்ற வெண்பாக்கள் பெண்பாலின் கண்விளக்க,
சிரித்து சிறைப்படுத்தும் சிறியாளின் செவிதழ்கள்,
அவள் முறைத்தாலும் வழக்கிழுக்கும்,
பல்வரிசை பதன்படுத்த,
மொழி திரட்டும் பல் இடுக்கில்,
பன்மொழியும் பழமொழிதான் !
இமை வலைந்து வழிவகுக்க,
அவ்விடங்காட்ட புள்ளியிட்டு,
சின்னஞ்சிறு கோலமது,
என்னை சிக்கவைக்கும் சிறுபொறிதான் !
கண்ணிமைக்கும் நொடியதினில்,
இவ்வனைத்தும் நான் கடக்க,
செந்தமிழின் விழித்திரைக்கு,
நானும் அந்நியன் தான் !
#வினித் மணிமாறன்
இரவோடு உறவாடி, நிலவொளியின் குளிரளந்து ;
நிலவொலிந்த வேலையிலும், கண்ணிமைக்கா கைபேசி !
என் எழுத்தெல்லாம் அவளிருக்க;
அம்முகம்,
நிதனித்தம் நினைவிருக்க;
எழுந்தெழுந்து நான் கிறுக்க;
கசிவுண்ட பேனா முனை,
என் கண்கசிவை காணாதேனோ !
விடிந்தும் தூங்காமல்,
விதியென ஏங்காமல்,
என் சதியை காணாமல்,
வீழுந்திரந்து போனாலும்,
மண் மசைக்கும் முன்னாலே,
என்னை பெற்றவளின் கருநகலே,
உன் மடிகடத்தி நான் கிடக்க,
இடிகடந்து நீ இறைக்க,
என் உயிர் கடக்கும் ஒருநொடியும்,
ஒன்றான ஓர் நொடிதான் !
#வினித் மணிமாறன்