செவ்வாய், 19 நவம்பர், 2019

மீள்வேனா நான் !


கை நிறைய காகிதம் இருந்தும், உன்னை
சிறு துனுக்கில் கிறுக்கிட ;

கிறுக்கிய வார்தையணைத்தும், உந்தன்
உதிர் மயிராகிட வேண்டும் !

கையேட்டின் வலப்புரமாய்,
நம் நாட்காட்டி நகர்ந்திட;

உன் சுருள் கூந்தல் நான் நிமிர்த்திட,
நிமிடங்கள் உறைந்திட வேண்டும் !

உன் நெற்றி உரசியுரசி,
நான் வழுக்கை அடைந்திட;

உன் முகக்கண்ணாடியின் கீறல்கள்,
என் இமைமுடியின் கூர்மை சொல்லிட வேண்டும் !

உன் மஞ்சள் என்னுடல் ஏற,
இருக்கியுரசி உறங்கிட,
உன் இதயத் துடிப்பே எந்தன்
நொடிமுள்ளாகிட வேண்டும் !

இவ்வனைத்தும் வெறும் கனாதானென்றால்,
நாம் மாண்டும் வாழ்ந்திட வேண்டும் ....

#வினித்_மணிமாறன்

சனி, 16 நவம்பர், 2019

அங்காளி ♥️


உன் பிறப்பின் செய்தி,

இக்கால பேரிகையில் ஒலி பரப்பாக;

இரு பத்தோடு மூன்றும் சேர்ந்தது, 

உன்முகம் காண !

இவளை இப்பெயரால் அழைப்போமா ?

அப்பெயரில் வழக்கிழுப்போமா ?

தமையாள் போல்,

குட்டச்சியோ ! குட்டிச்சியோ ?

அங்காளியோ ! அனுவோ ?

எதுவானாலும்...  

பெயர் சூட்டப்படாத சூர்ப்பனகையே ,

உன் ஆசைகள் தீர்த்திட,

ராவணன் நான் தான் ...

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 8 நவம்பர், 2019

துயிற்துணைவி


திகட்ட திகட்ட உம்மை கிறுக்கி,

அதில் நம்மை மட்டும் பொறுக்கி,

தீர்த்த வார்த்தைகளனைத்தும் கோர்த்து ;

என் ஆசைகள் தீர்த்து பார்த்திட,

மஞ்சள் கயிரொன்றா வேண்டும் ?

சேராது நாம் கடந்த வாழ்வின்,

கனவும் சோர்ந்து போனபின் கூட, 

உன்னை சார்ந்து வாழாத நொடிகள்,

கடந்த காலாமானாலும்,

உன் நினைவற்று கிடந்த காலம்,

 ஆகாது கண்மணியே !

#வினித்_மணிமாறன்

சனி, 2 நவம்பர், 2019

தொலைதூரக் காதல்



ஓர் கூரை பகிர்ந்து,

கருமை நான் காண ;

வெண் வானம் அவள் காண;

என்நாள் அவளிரவில் கலவரம் காண,

என் நிலவரம் அறிந்தும்;

அவள் உறங்கும் நொடியில்,

நான் பேசும் காணொளி தொடர்பில்,

சிவப்பு பொத்தானை அழுத்தி நகர்கையில்,

அவள் உறக்கம் பறிக்கும் என்நாள்,

தொலை தூரம் இருந்தாலும்,

தொலையாத திருநாள்தான் !

#வினித்_மணிமாறன்