ஏப்ரல் 26, 2020
எங்கே போய்விட போகிறாய் என்றெண்ணினேனோ ?
இல்லை நம்மவள் தானே என்ற அலட்சியமோ ?
ஏதும் நேராமல் இருந்திருந்தால்...
உன்னோடு இந்நேரம் கதைத்து,
இக்கோடைமழையின் ராக்குளிரில் கதகதத்தது இருப்பேமோ ?
இல்லை என் மாரி நீ இருக்க,
ஏன் இந்த கோடை மழைக்கு பொறாமையோ;
என்றெண்ணி இருப்பேனோ !
என் கண் வருடும் பெண்களெல்லாம் அழகென தோன்றலாம்,
அவ்வழகிகள் உன்னழகை ஒத்திருக்கலாம்;
அவர்கள் மேல் கண்டகனக் காதல் கொண்டாலும்,
ஒன்றை நினைவில் கொள்!
என் முதல் காதல் நீ !
ஏப்ரல் 27, 2020
எதில் தோற்றேன் ?
உன்னழகிலா ?
உன் பேச்சிலா ?
ஆண் என்ற கர்வம் காணாமல் போன கனத்திலா ?
உன் பெண்ணியம் நெகிழ்ந்து,
வரா கவிதையினை கடன்வாங்கி தர முயன்ற நாளிலா ?
கடன்தானே, வட்டி கொடுத்து கொள்கிறேன் !
என்னுடமை பொறிக்க முயன்றதை,
சந்தேகமென்றெண்ணி நம் செழிற் நாட்களில்,
கல்யாண கனவை விதைத்து,
அதில் அமிலமழை, வேண்டாம் மாரி !
ஏப்ரல் 28,2020
எல்லாம் கனவோ ?
இவையெல்லாம் நடப்பதை கண்டேன்,
வியர்த்து குளித்து எழுந்தேன்,
பேசிய வார்த்தைகள் தொண்டையில் வெற்றிடமேற்ற,
நீரூற்றி நிறப்பினேன்.
எள்ளும் சொல்லும் என்ற பழமொழிப் பளிச்சிட,
என் கன்னமறைந்தேன் !
அவளிடமா கேட்டாய், நீயா கேட்டாய் ?
ஒருவேளை என் மகனிடம்,
என் காதல் கதை கூறிட,
அதில் காரம் வேண்டுமென்று தான்,
இவ்வதிகாரம் சேர்த்தானோ ?
என்றெண்ணிக்கொண்டு,
நீ நாளை பேசுவாய் என்ற நிம்மதியான நினைவுடன்,
நித்திரை கொள்கிறேன் !
ஏப்ரல் 29,2020
கணையாழி
நான் உனக்கிட்ட கணையாழி,
கனக்கிறது என் சட்டை பையில்,
என்ன செய்ய, என்னிடம் ஆஞ்சிநேயனில்லை !
நீ நினைத்த நேயனெவனும்,
உண்மையில் நேயனில்லை,
என்று நான் உனக்கு புரிந்திட்ட தவறினேனோ ?
புரிந்துகொள் என் கண்மணியே,
எனக்கென உண்மை பகிர்ந்த,
நண்பன் எவனுமில்லை,
உன்னைக் காணும்வரை !