வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

(ச்+இ)வராத்திரி


விடியல் வான்காண,
போர்வை ஈழ்த்தனைத்து,
உன் நுனிமுடி முகர்ந்து,
தும்மி எழுந்தும்,

மயங்கி - விடியல் கடத்திட வேண்டும் !

என்னை புறந்தள்ளி எழுந்து நகரையில்,
உன்கை,
பிடித்தும் வழுக்கிட,
வேர்வையை வழக்கிட வேண்டும் !

அடுத்த நொடி விழிக்கையில்,
ஈரத்தலையோடு உன் ஒப்பனை
நடந்தேற,
என் நாள் விடிந்தேற வேண்டும் !

ஒப்பனை நான் கழிக்க,
உன் கண்மை வம்பிழிக்க,
நான் உருண்டு எழுந்திட வேண்டும் !

நான் தீண்ட முயல்கையில்,
நீண்ட கைகள் என்னை,
குளியலறையில் சிறைபடுத்த வேண்டும் !

இருள் சூழ்ந்த அறையில்,
உன் வாசம் மட்டும் நிறைத்து,
அவ்வாசத்தால் காசநோயாளியாகிட வேண்டும் !

நோய் கக்க இருள் கடத்தி,
எந்தினந்தினம் சிவராத்திரியாகிட வேண்டும் !

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

கம்பத்தின் மாரியவள்


வலைத்தளம் வலைந்து என் வழித்துணையாய் வந்தவளே !

மூவேந்தர் புடை சூழ,
என் காதல் கடை சூழ,

இக்கார்மேக காரனை,
உன்னோடு இணைக்கத்தான்,

ஈராண்டாய் என்னை கோடையில் கொன்றாயோ ?

உன்கோடையின் வாட்டத்தால், 
சித்திரை மட்டுமின்றி,
நித்திரையும் மாமழை தான்!

என் காதல் நான் உரைக்க,
சுருளியின் நீர் வீழ்ச்சி ;
தாழ்ப்புணர்ந்து வடிந்திடட்டும் !

முப்பதை நான் கடக்க,
பூப்பெய்தும் என் காதல்;
உன்னைக் கனங்கனம் கவித்திடட்டும் !

என் வாழ்வின் காதலர் தினம் 
ஆகஸ்டில் நிலைத்திடட்டும்!

இவையனைத்தும் நானுரைக்க,
உன் காதல் வரி இரண்டால்,
என்னை நனைத்திடு கவிக்கடலே !

#வினித்_மணிமாறன்

கடக்கட்டும் காதலர் தினம்


கோடி பொய் சொல் !
கொஞ்ச பழகிக்கொள் !

சண்டைக்கு காரணமிடு !
காலில்விழுந்து தண்டாலெடு !

மாயபோதையில் மடிந்திடு !
அவள் மடி கிடந்திடு !

மக்களை மற !
மானம் துற !

ஆச்சரியம் அடுக்கிவை !
அவளாசைகளை அடக்கிவை !

செயலனைத்தும் சொல்லிவை !
அவள்மறைக்க தள்ளிவை !

அழுகை கற்றுக்கொள் !
கேள்வி கேட்டுக்கொல் !

கிடைக்கும்வரை நடித்திடு !
கிடைத்தபின் கடிந்திடு !

இவைதான் காதலென்றால்
இக்கனமே கடந்திடு...

காதலேனும் வாழட்டும் !

#வினித்_மணிமாறன்