வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

கம்பத்தின் மாரியவள்


வலைத்தளம் வலைந்து என் வழித்துணையாய் வந்தவளே !

மூவேந்தர் புடை சூழ,
என் காதல் கடை சூழ,

இக்கார்மேக காரனை,
உன்னோடு இணைக்கத்தான்,

ஈராண்டாய் என்னை கோடையில் கொன்றாயோ ?

உன்கோடையின் வாட்டத்தால், 
சித்திரை மட்டுமின்றி,
நித்திரையும் மாமழை தான்!

என் காதல் நான் உரைக்க,
சுருளியின் நீர் வீழ்ச்சி ;
தாழ்ப்புணர்ந்து வடிந்திடட்டும் !

முப்பதை நான் கடக்க,
பூப்பெய்தும் என் காதல்;
உன்னைக் கனங்கனம் கவித்திடட்டும் !

என் வாழ்வின் காதலர் தினம் 
ஆகஸ்டில் நிலைத்திடட்டும்!

இவையனைத்தும் நானுரைக்க,
உன் காதல் வரி இரண்டால்,
என்னை நனைத்திடு கவிக்கடலே !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக