புதன், 11 டிசம்பர், 2019

பாரதியின் (கண்)மணி


தமிழின் முகவரி உன்பெயர் உரைக்க,

கரைத்த காதல் தேக்கி,
தயக்கமென விழுமாடைதனை நீக்கி,
அடியாழம் அளந்திட,
வியாழன் வரை நாட்கடத்தி,
வெள்ளியதை கிழித்தெரிந்து;

உன் வரவுணரும் நொடியடைய,
இருபத்தி நான்காண்டில்,
உணராத உணர்வனைத்தும்,
ஒருமித்து உயிரேர;

உன் உச்சவம் நிகழ்ந்தேர,
வெள்ளை விழிக்கடலில்,
உன் கருவிழி கரையேற,
நீ கையசைத்து நகர்ந்தாலும்,

உன் கையெழுத்தில் நான் சேர,
உயிற்கடத்தி காத்திருப்பேன்,

என்னை கவித்திடு பாரதியே !

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 19 நவம்பர், 2019

மீள்வேனா நான் !


கை நிறைய காகிதம் இருந்தும், உன்னை
சிறு துனுக்கில் கிறுக்கிட ;

கிறுக்கிய வார்தையணைத்தும், உந்தன்
உதிர் மயிராகிட வேண்டும் !

கையேட்டின் வலப்புரமாய்,
நம் நாட்காட்டி நகர்ந்திட;

உன் சுருள் கூந்தல் நான் நிமிர்த்திட,
நிமிடங்கள் உறைந்திட வேண்டும் !

உன் நெற்றி உரசியுரசி,
நான் வழுக்கை அடைந்திட;

உன் முகக்கண்ணாடியின் கீறல்கள்,
என் இமைமுடியின் கூர்மை சொல்லிட வேண்டும் !

உன் மஞ்சள் என்னுடல் ஏற,
இருக்கியுரசி உறங்கிட,
உன் இதயத் துடிப்பே எந்தன்
நொடிமுள்ளாகிட வேண்டும் !

இவ்வனைத்தும் வெறும் கனாதானென்றால்,
நாம் மாண்டும் வாழ்ந்திட வேண்டும் ....

#வினித்_மணிமாறன்

சனி, 16 நவம்பர், 2019

அங்காளி ♥️


உன் பிறப்பின் செய்தி,

இக்கால பேரிகையில் ஒலி பரப்பாக;

இரு பத்தோடு மூன்றும் சேர்ந்தது, 

உன்முகம் காண !

இவளை இப்பெயரால் அழைப்போமா ?

அப்பெயரில் வழக்கிழுப்போமா ?

தமையாள் போல்,

குட்டச்சியோ ! குட்டிச்சியோ ?

அங்காளியோ ! அனுவோ ?

எதுவானாலும்...  

பெயர் சூட்டப்படாத சூர்ப்பனகையே ,

உன் ஆசைகள் தீர்த்திட,

ராவணன் நான் தான் ...

#வினித்_மணிமாறன்

வெள்ளி, 8 நவம்பர், 2019

துயிற்துணைவி


திகட்ட திகட்ட உம்மை கிறுக்கி,

அதில் நம்மை மட்டும் பொறுக்கி,

தீர்த்த வார்த்தைகளனைத்தும் கோர்த்து ;

என் ஆசைகள் தீர்த்து பார்த்திட,

மஞ்சள் கயிரொன்றா வேண்டும் ?

சேராது நாம் கடந்த வாழ்வின்,

கனவும் சோர்ந்து போனபின் கூட, 

உன்னை சார்ந்து வாழாத நொடிகள்,

கடந்த காலாமானாலும்,

உன் நினைவற்று கிடந்த காலம்,

 ஆகாது கண்மணியே !

#வினித்_மணிமாறன்

சனி, 2 நவம்பர், 2019

தொலைதூரக் காதல்



ஓர் கூரை பகிர்ந்து,

கருமை நான் காண ;

வெண் வானம் அவள் காண;

என்நாள் அவளிரவில் கலவரம் காண,

என் நிலவரம் அறிந்தும்;

அவள் உறங்கும் நொடியில்,

நான் பேசும் காணொளி தொடர்பில்,

சிவப்பு பொத்தானை அழுத்தி நகர்கையில்,

அவள் உறக்கம் பறிக்கும் என்நாள்,

தொலை தூரம் இருந்தாலும்,

தொலையாத திருநாள்தான் !

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

அவள் முதுமையால் என் இளமை

இளநரை அடைந்து ஏங்குகிறேன்,

அன்று வாங்கி தந்த இளநீர் மீண்டும் கிட்டுமாயென்று ;

நீ தூரம் சென்ற நாட்களில் வந்த காய்ச்சலிடம்,

டெங்கு மலேரியா தோர்த்திருக்கும் !

ஆஸ்பிரின் டோலோ அன்றேது ?

கிழவி நீ கொஞ்சும் சத்தம் போதும் !

என் குடும்பப் பொக்கிஷமே,

வாழ்ந்தவரை மனம் திறக்கா நீ,

சாவின் விளிம்பில் வினவாமல் கூறினாய், 

உன் மனக்கதவின் சாவி நான் என்று !



என்றும் உன் நினைவில் 

உன் பெயரன்

சனி, 24 ஆகஸ்ட், 2019

கோடையின் மழையவள்

நுண் துளி தூரல்கள் என் நுனி முடி நனைக்க;

நினைவுகள் நுண்ணித்தம் நின்னை நீர்மிக்க,

நீர்மமாக நீர்கூழ்மமான நான்..

நீ நின் மனம் விரிக்க மறுப்பதை போல,

கைப்பைக்குள் இருக்கும் குடைவிரிக்க கஞ்சத்தனம் காட்டிலும்,

இந்நித்தம் உன் காச்சல் வருமென ஒதுங்கயில்,

உன்னைப்போலவே சாலையில் மழையை,

ரசித்து நடக்கும் பெண்ணை கண்டதும் நனைகிறேன்...



எனக்கு நனைதல் புதிதா என்ன ?

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 18 ஜூன், 2019

காதல் கடல்

ஊஞ்சல் ஆடுவது போல்,

ஊசலாடி உன்னோடு உறவாடுகிறேன்,

எட்டாத கால் கொண்டு,

எட்டுத்திக்கும் ஏரிட்டு,

உன் பாதம் படு இடம் படாதா என்று !

உன் காதல் கடலின்,

வருமலை என்கால் நனைத்து,

உன் நினைவதை,

பின் செல்கையில்,

என்கால் கீழ் குழி புதைத்து,

வேரேற்றுகிறது;

கடல்மண் போன்ற,

அச்சாரம் அற்ற அரைமனதில் !

#வினித்_மணிமாறன்

புதன், 13 பிப்ரவரி, 2019

மீண்டும் ஓர் காதலர் தினம்



இருவலையல் இணைத்தணிந்து,
இன்புற்று ஈழ்த்தனைத்து,
முத்தமிட முயல்கையில்,
முன்நின்று குத்தும் மூக்குத்தியாய் ;

நுனி கண்ணில் சிக்கும் அவள் மையதை,
துடைக்கும் விரல் தங்கும் மருதானிச்சாயமாய் ;

நழுவும் இதயம் கழுவ படுமுன்,
அவள்கண் கனியென சிவந்து  அணியேற்ற,
சிதைந்தாலும் சிகை தங்கும் வாசம் தரும்,
சிறுபூவாய், சிகைக்காயாய் ;

இருந்திட நான் துடித்தும் ;
கன்னியவள் கடிந்து கடக்கையில்,
நான் கடியும் கவிதையுள்,
என் எழுத்தை அணியாக்கி,
என்னையும் அழகென உணர்த்தியவளே !

பல காதல் நடந்திருக்க,
நடைச்சுவடாய் நான் இருக்க,
கடக்கட்டும் இத்தனிமரத்தின் காதலர் தினம் !

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கடந்த காதலி



நிலவொளியில் வினவிய மனம்,
கனவுகளை கலையாமல்,
நடந்ததெல்லாம் களைந்திட;

நகரும் வழியெங்கும் தேடினேன்,
என் காதோரம் வழி மொழிந்து,
என் கனவுகளை விதைத்தவளை !

விதைத்தவள் உறங்கிட,
விதைநிலம் கிறங்கிட,
நகரும் நகரெல்லாம்,
அவள் நிற்கும் கானல்தான் !

என் பேனா மையில்,
குளித்து குதித்த எழுத்துக்கள் சொல்லும்,
என்மைய்யில் உன்மைய்யின் கருமையை !

இம்மையில் எம்மை நினைத்தாயா,
என்பதை நான் அறியேன் ;
கண் சுருக்கி கிருக்கையிலும்,
கூன் விழுந்து நடக்கையிலும்,
உன்னை நான் மறவேன் !

#வினித்_மணிமாறன்