ஞாயிறு, 20 அக்டோபர், 2019

அவள் முதுமையால் என் இளமை

இளநரை அடைந்து ஏங்குகிறேன்,

அன்று வாங்கி தந்த இளநீர் மீண்டும் கிட்டுமாயென்று ;

நீ தூரம் சென்ற நாட்களில் வந்த காய்ச்சலிடம்,

டெங்கு மலேரியா தோர்த்திருக்கும் !

ஆஸ்பிரின் டோலோ அன்றேது ?

கிழவி நீ கொஞ்சும் சத்தம் போதும் !

என் குடும்பப் பொக்கிஷமே,

வாழ்ந்தவரை மனம் திறக்கா நீ,

சாவின் விளிம்பில் வினவாமல் கூறினாய், 

உன் மனக்கதவின் சாவி நான் என்று !



என்றும் உன் நினைவில் 

உன் பெயரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக