இப்படியாக அந்த இரண்டு நாட்கள் விரைந்தோட, திங்கள் வந்தது ; கல்லூரிக்கு அவ்வளவு மகிழ்ச்சியோடு அவன் தயாரானதே இல்லை.
200 text மெசேஜ்களுக்கு அவ்வளவு சக்தியுண்டா என்றெண்ணும் அளவுக்கு ஒரு மாற்றம்.
பேருந்தில் ஏறி அமர்ந்து அவளை தேட தேவையே இல்லை என்பது போல, மணியும் அவளும் ராமர் கோட்டின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.
இவனும் சென்று பின்னால் சீட்டில் பலாஜியுடன் அமர்ந்து கொண்டான்.
என்னவென்று தெறியாத அளவுக்கு அன்று அவள் சற்று கூடுதல் அழகாக இருந்தாள்.
அவள் கம்மலாடும் அழகை ஸ்லோ மோஷனில் ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவ்வப்போது காற்றில் வளைந்த முன்முடி, கம்மலை வம்பிழுத்தும், கம்மல் கற்களில் சிக்கி புரண்டு தப்பித்து கொண்டிருந்தது - இவனைப்போல்.
இதை ரசித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், எதிரே வந்த லாரி சற்றும் எதிர் பாராத நேரத்தில் இவர்களின் பேருந்தில் உரசி, பேருந்தை நிலைகுலைய செய்ய, ஓடும் பாதையில் இருந்து தடுமாறிய பேருந்து அருகாமையில் இருந்த மதுக்கட்டையில் முட்டி மோதி நிறுத்தப்பட,
பேருந்தில் இருந்த பெண் குரல்கள் எல்லாம் ஒன்று கூடி, சூப்பர் சிங்கர் கோரஸ் தோற்கும் அளவிற்கு சத்தம் எழுப்பி முனுமுனுப்புடன் என்ன நேர்ந்தது என்று எல்லோரும் இயல்பு நிலை திரும்ப சிறு நேரம் எடுத்திருக்கலாம்.
ஆனால் இவையனைத்தும் கனநேரத்தில் நடந்தேறியது.
அருகில் இருந்த ஊரார் அனைவரும் அவ்விடம் வந்து சேர்ந்து, சிறு அடி பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க முயன்ற தருணம்.
இவனுக்கு கேட்டதெல்லாம் அவள் ஒருத்தியின் குரல் மட்டும் தான்.
அப்பா ! அம்மா ! வலிக்குதே, என் தல, கை, என்றவள் குரல் எழுப்பி கொண்டிருக்க.
இவன் தனது தலையில் இருந்து வழியும் இரத்தத்தை பொருட்படுத்தாமல், தென்றல் ஒண்ணும் இல்ல, எழுந்திரி, வெளிய போயிடலாம் என்று சொல்ல...
அவளும் மத்திரிக்க பட்ட கோழியாய், அவன் சொன்ன சொல் கேட்டு, எழுந்து நடந்தாள்.
மணிமேகலையும் அவளை தொடர்ந்து எழுந்து நடக்கலானாள்.
சன்னலோரம் இருந்தபடியால் அவளுக்கு பட்ட அடியை விட, அங்கு நடந்த சம்பவத்தை தெளிவாக பார்த்தமையால், பயமிகுதி அவளை மேலும் வலுவிழக்க செய்திருந்தது.
இவன் அங்கும் இங்கும் ஓடி ஒரு பருத்தி துண்டை எடுத்து வந்து தலையில் வழியும் இரத்தத்தை துடைக்க முயல்வதற்குள், அங்கிருந்த பெண் ஆசிரியை அதை வாங்கி துடைக்க முற்பட, மற்றவர்கள் இவர்களை சுற்றி நின்று என்ன நடக்கிறது என்று பார்க்க தொடங்கினார்கள்.
தென்றல் கிட்டத்தட்ட நிதானம் இழந்திருந்தாள்...
தென்றலுக்கு கூட தென்றலின் தீண்டல் தேவை பட்டதாக தோன்றியது.
உடனடியாக காட்டுத்தனமாக கத்தினான், எல்லாரும் கொஞ்சம் நகருங்க..
இவங்களுக்கு கொஞ்சம் காத்து வரட்டும்...
அனைவரும் சற்று நகர்வதற்குள் 108 அவசர ஊர்தி அங்கே வந்து சேர்ந்தது, உடனே மாற்று பேருந்தும் வந்து சேர்ந்தது.
தென்றல் மற்றும் லேசான காயத்துடன் இருந்த இருவரை அழைத்துக்கொண்டு ஆசிரியை ஒருவர் 108 அவசர ஊர்தியில் ஏற, அவனையும் அவளுடன் அவசர ஊர்தியில் சிறையிட்டனர்.
மற்றவர்கள் மாற்று பேருந்தில், கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆங்காங்கே இரத்த துளிகளுடன், அவ்விடம் போர்கலமாய் காட்சியளித்தது.
இவர்கள் ஐவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டு, தேவையான முதலுதவி செய்யப்பட்டு, ஓய்வறையில் படுக்க வைக்க பட்டனர்.
இவனுக்கு அடுத்த படுக்கையில் அவள் இருந்தாள், தலையில் இருவருக்கும் ஜோடியாக கட்டப்பட்ட வெள்ளை துணி அவர்களை ஒருமை படுத்தியதாக நினைத்து சற்று பம்மாத்தடைந்தான்.
அவள் சற்று திரும்பி சற்றும் முற்றும் பார்க்க முயல, அவளும் அவனும் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்தார்கள்.
ஏதும் பிரச்சனை இல்லையே என்று இவன் கேட்க விரைய, அவளோ ; எனக்கு ஒன்னுமில்ல, நீ okey தான என்றாள்.
இவன் சற்று தலையசைத்து, அவளை பார்த்தபடி கதைக்கலாம் என்று சற்று திரும்ப முயல, தென்றலின் பெற்றோர் அங்கே வந்தடைந்தனர்.
அவளது தாய், பொறந்தநாளும் அதுமா என் புள்ளைக்கு இப்டி ஆகி போச்சே என்றவுடன் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இது தெரியாமல் போயிற்றே என்று அவன் தன்னை தானே காரித்துப்பாத குறையாக நினைத்து சற்று நிமிரும் நேரம், அவனது பெற்றோரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.
பிறகென்ன... காத்திருங்கள் !
