திங்கள், 30 ஜூலை, 2018

தாலாட்டு


தூளியில் நான் துள்ள,
என்னை அடக்கி ஆள,
மீட்டப்படும் அடுக்குமொழி கவிதை ;

பொருள் உணரா அகவையிலும்,
நான் அகப்பட்ட இசையற்ற விசை ;

அலுவல் இருந்தும்,
மூர்த்தோன் அழுவல் இருந்தும்,
என் அழுகையே அவள் அழைப்பொலியென ,
பதண்டும் பிதற்றாத பி.சுசீலாவின்,
ஆஸ்கார் பாடல் ;

மாறாத குரலில் பாடும் இவள்,
சுருதியை - யார் மகள் என்பாள்,

கோடி கேட்டும்,
தேடியும் கிட்டாத,
சோடி பொருள்,
என்னன்னையும் தாலாட்டும்...

#வினித்_மணிமாறன்

செவ்வாய், 24 ஜூலை, 2018

காவிரி மைந்தன்





பாலனாய் - கரைகண்ட காவிரியின் நுறைகண்டு சிரித்து,

மீளியாய் - கலங்கிய நீர் தெளிய; தெளிந்த நாள் உடல் நனைத்து,

நீச்சல் அறிய அந்நீரில் எந்தகப்பனோடு நான் ஊற,

உக்கிரம் தீரா காவிரிக்கு பயந்து, 

எம்மையவள் அதட்டி அழைக்க, கரையடைந்து;

ஈரம் உலர்ந்த பின்,

குட்டிக்கரணம் செய்கையில் நான் மறவோன்,

திறவோன் ஆகி விடலை அடைந்தும் அதை விடாத இளம் காளை,

இன்று முதுமகனாகி;

கரைகண்டும் கரையா நினைவுகள் மீண்டும் கிடைத்திட,

விடலையிலே விடாமல் வாழ்ந்திருக்க விழைகிறேன்...

#வினித்_மணிமாறன்


பொருள் விளக்கம்

ஆண்களின் ஏழு பருவங்களும் அதற்குள்பட்ட அகவையும் :-

பாலன் 1 - 7
மீளி 8 - 10
மறவோன் 11 - 14
திறவோன் 15ஆம் அகவை
விடலை 16ஆம் அகவை
காளை 17 - 30
முதுமகன் 30ஆம் அகவைக்கு மேல்