தூளியில் நான் துள்ள,
என்னை அடக்கி ஆள,
மீட்டப்படும் அடுக்குமொழி கவிதை ;
பொருள் உணரா அகவையிலும்,
நான் அகப்பட்ட இசையற்ற விசை ;
அலுவல் இருந்தும்,
மூர்த்தோன் அழுவல் இருந்தும்,
என் அழுகையே அவள் அழைப்பொலியென ,
பதண்டும் பிதற்றாத பி.சுசீலாவின்,
ஆஸ்கார் பாடல் ;
மாறாத குரலில் பாடும் இவள்,
சுருதியை - யார் மகள் என்பாள்,
கோடி கேட்டும்,
தேடியும் கிட்டாத,
சோடி பொருள்,
என்னன்னையும் தாலாட்டும்...
#வினித்_மணிமாறன்
