செவ்வாய், 24 ஜூலை, 2018

காவிரி மைந்தன்





பாலனாய் - கரைகண்ட காவிரியின் நுறைகண்டு சிரித்து,

மீளியாய் - கலங்கிய நீர் தெளிய; தெளிந்த நாள் உடல் நனைத்து,

நீச்சல் அறிய அந்நீரில் எந்தகப்பனோடு நான் ஊற,

உக்கிரம் தீரா காவிரிக்கு பயந்து, 

எம்மையவள் அதட்டி அழைக்க, கரையடைந்து;

ஈரம் உலர்ந்த பின்,

குட்டிக்கரணம் செய்கையில் நான் மறவோன்,

திறவோன் ஆகி விடலை அடைந்தும் அதை விடாத இளம் காளை,

இன்று முதுமகனாகி;

கரைகண்டும் கரையா நினைவுகள் மீண்டும் கிடைத்திட,

விடலையிலே விடாமல் வாழ்ந்திருக்க விழைகிறேன்...

#வினித்_மணிமாறன்


பொருள் விளக்கம்

ஆண்களின் ஏழு பருவங்களும் அதற்குள்பட்ட அகவையும் :-

பாலன் 1 - 7
மீளி 8 - 10
மறவோன் 11 - 14
திறவோன் 15ஆம் அகவை
விடலை 16ஆம் அகவை
காளை 17 - 30
முதுமகன் 30ஆம் அகவைக்கு மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக