புதன், 18 ஏப்ரல், 2018

ஆசிபா


அம்புவி கண்ட அறும்பவளை, அவராகமின்றி ;

அவரசையை ஆடைகளைந்த காமரக்கன்,

வைத்திய முறையில் அவத்தியமேற்றி,

கண்வருடா வன்புணர்வேற்றி,

கருக்கானா கண்மணியை கற்பழித்து உருகளைத்து ;

கருவறையிலிருந்து,

எமனறை சேர்த்து வைக்க,

எவனடி நினைந்திருப்பான் !

அவள் அசிதன் அறிந்த நொடி,

அக்குருவிலும் ரத்த நெடி ;

அவளசிதன் நான் இல்லை,

என் தமக்கை அவளும் இல்லை,

இருந்தும் இந்த நொடி,

நான் இருந்தென்ன பயனென்றெண்ணியனேன் ?

இம்முறையும் எம்முறையும் இவ்வவத்தியம் செய்தானை,

எம்மகனாய் இருந்தாலும் புணருறுப்பருப்பேனென,

சூழரைகட்டும் ஆண்மை !

#வினித்_மணிமாறன்

தமிழ் அறிக

அம்புவி ~ உலகம்
அவராகம் ~ இச்சையின்மை
அவரசை ~ தங்கை
அவத்தியம் ~ குற்றம்
அசிதன் ~ தகப்பன்
அக்குரு ~ விரல் நுனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக