வெள்ளி, 22 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 11


நாம் இதுவரை கடந்த காலம் மிக அழகானது ! நிகழ்கால வாழ்வில் நாம் நம்பிக்கையற்று நிற்கும்  பொழுதெல்லாம் அந்நினைவுகள் நம்மை ஆரத்தழுவி அமைதிநிலையில் பரவசிக்க தவறுவதில்லை.

ஒரு இழப்பின் முடிவுரையில் தான் மற்றொரு பிறப்பின் முன்னுரை இருக்கிறது என்று நம்புங்கள்.

நிகழ்காலத்தில் நல்ல நபர்களை நண்பர்களாய் சம்பாதியுங்கள். நீங்கள் கடக்கும் கடுமையான பாதைகளின் மாறுபட்ட பரிமாணங்களை அறிந்தவர்கள் அவர்கள் !

அப்படியொரு நண்பன் அல்லது தோழி தான் என்னை எழுத தூண்டிக்கொண்டிருக்கிறார்.

உங்களை உங்களது வேட்கையோடு சேர்த்து ரசிக்கும் நண்பர்களை எந்தகாலத்திலும் கைவிடாதீர்கள் ! 

அவர் இந்த பதிவையும் படிக்கும் பச்சத்தில் .. நன்றி !

லதாவின் அழுகையை கண்ட ராமன் செய்வதறியாது நின்றான்.

பள்ளியில், உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவன் வரை வீட்டு பாடத்தை சரி பார்த்த ஆசிரியர், உங்களை நோக்கி வரும்பொழுது கடைசி மணி அடிப்பது போல, பல்லெட்டின் மணிச்சத்தம் கேட்க, தப்பித்தோம் என்று நினைத்தான் ராம். 

லதாவின் விம்மலும்  நின்றது.

அடிடா புடிடா என்று எல்லோரும் ஓடி தலைமறைவு ஆனார்கள். 

இப்படிதான் உங்கம்மா காதலை கட் அண்ட் ரைட்டா சொன்னா; என்று ராமன் சிறு ஓய்வு கொடுத்தார் !

அடேங்கப்பா ! ஒரு வாரணம் ஆயிரம் part 2 வே  ஓடிருக்கும் போலயே என்று வேலன் பூரிப்படைய, போதும் போதும் உங்க பூரி கதயெல்லாம்; அதுக்கப்புரம்  நான் தைரியமா மூஞ்சிக்கு முன்ன நின்னு, நான் உங்கள காதலகிக்கிறேன்னு காலேஜ் வாசல்ல சொன்னதெல்லாம் உங்கப்பாக்கு நியாபகம் வராது என்றாள் லதா. 

அத எப்படி மறப்பேன் !

NDAல அந்த குளிர்காத்துல கதக்வாஸ்லா ஏரி (Khadakwasla Lake) கரையில, ஏன்டா இங்க வந்தோம்ன்னு, நான் கண்ண கசக்குன ஒவ்வொரு நாளும் ; தோத்துடுவேன்னு துவண்டு போயி நின்னப்போலாம்; என்னய்ய தூக்கி நிப்பாட்டுனதே அந்த நிமிஷங்களோட நினைவலைகள்தாண்டி என்றார் ராமன்.

(உங்களிடம் யாரேனும் "எனக்கு உன்னை பிடித்திருக்கிறது" அல்லது  "உன்னுடன் கழித்த நொடிகள் வாழ்வில் மறக்கமுடியாதது" என்றெல்லாம் கூறி இருந்தால் அந்த நிமிடங்களை நினைத்து பாருங்கள் ! அந்த நொடிகள் அதீத அழகானவை ! அது போன்ற நினைவுகள் நம்மை நமது கடினமான நாட்களில் "நம்மையும் சிலருக்கு பிடிக்கும், அவர்கள் அருகாமையில் நமக்கு இந்த வாழ்வை பிடிக்கும் " என்று நினைக்க செய்து தேற்றும். அப்படி ஒருவரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், காத்திருங்கள் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு)

கல்யாணம் ஆகி இத்தன வருஷத்துல இதெல்லாம் சொல்லவே இல்ல, இப்போ என்ன திடீர்னு மணிரத்தினம் படம் கணக்கா சொல்றீங்க, என்று லதா  வம்பிழுக்க. 

நீங்க சொல்லுங்கப்பா என்றான் வேலன், பூஸ்ட்ட குடிச்சுக்கிட்டே .

“தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே” என்பது போல ராமன் இனம்புரியாத இன்பமுடன் அந்த நொடிகளுக்குள் பிரயானமானார்.

லதா காதல சொல்லி 8 மாசத்துல நான் அந்த ஊர விட்டு போயிட்டேன். அப்புறம்  2 வருஷம் விடுதி வாழ்க்கை, படிப்புன்னு ரொம்ப வேகமா ஓடிடுச்சி. 

2 வருஷதுக்கு அப்பறம், எங்க டியூஷன் அக்காக்கு கல்யாணம், நான் National Defence academy க்கு  entrance  எழுதிட்டு, SSB Interview க்கு wait பண்ணிட்டு  இருந்தேன்.

அப்போ அந்த கல்யாணத்துக்கு போயிட்டு, நைட் ஒரு 7.30 மணிக்கு எங்கவீட்டுக்கு போலாம்னு மாமா வீட்டுல இருந்து கிளம்பினேன்.

ரெண்டு தெரு கடந்தாச்சு, யாரோ பின்னாடியே வர்ற மாதிரி இருந்துச்சு, தெருவோட இரண்டு முனையிலயும் light எரிய தெரு மட்டும் இருட்டா இருந்துச்சி.

அங்கிருந்த கல்லூரியின் வாயிலை கடந்தப்போ திரும்பி பாத்தேன், தூரத்துல யாரோ சைக்கிள்ள வர்ற மாதிரி இருந்துச்சி; சரி கிட்ட வரட்டும் உதவி கேட்டு போயிடலாம்ன்னு நெனச்சுக்கிட்டு, நடந்தேன்.

அடுத்த 20ஆவது நொடி, ராம் நில்லு  உன் கிட்ட பேசனும்ன்னு மூச்சி வாங்க ஒரு கீச்சு குரல்; 

யாருடான்னு இருட்டுக்கு கண்ண பழக்கி பார்த்தா, லதா !

அந்த 3 வருஷத்துல லதாவ பாக்க கூட இல்ல, அவளோட குரல்ல அப்படி ஒரு மாற்றம், ஆள் பார்க்க அடையாளமே தெரியாம அந்த இருட்டுலயும் அப்படி ஒரு அழகு.

15 நொடி அமைதிக்கு பிறகு, பேச தொடங்கினாள்,

எப்படி இருக்க, சாயுங்காலமை வந்துருப்பேன், அத்தை வீட்ல நேரம் ஆகிட்டு; நீ எப்படியும் பாரதி அக்கா கல்யாணதுக்கு வருவேன்னு  மனசுல பட்டுச்சி.

நெனச்ச மாதிரியே  நீயும் வந்துட்ட !

நீ இல்லாம இந்த 3 வருஷம் இங்க இருக்கவே புடிக்கல,.. 

இதுக்கப்புறம் என்ன பண்ண போற ? 

இங்க எங்கயாவது காலேஜ்ல படிப்பியா இல்ல, வெளியூர் போக போறியா ?

நீ தான் எல்லாம் முடிவு பண்ணி வச்சருப்பியே, என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினாள்.

நான் NDA Clear பண்ணி Defence போக போறேன், அப்டின்னு சொன்ன உடனே ஒரு அமைதி.

Written Exams நல்லா எழுதிருக்கேன், எப்புடியும் உள்ள போயிடுவேன்.

நீ என்ன பண்ண போற என்றான் ராமன்.

நான் 12th board exams நல்லா எழுதிருக்கேன், எப்படியாச்சும், MeritMedical Seat வாங்கிடுவேன் என்றாள்.

சூப்பர்ப்பா என்றார் ராமன்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு அமைதி நிலவ, அவளே அந்த அமைதியை உடைத்தாள்.

சேரி, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன், என்று சொன்ன அடுத்த நொடி தூரத்து தெருவிளக்கின் பிரதிபளிப்பு அவளது கண் எடுத்துக் காட்ட, அவள் அவளது வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினாள்.

ராம், நீ போன அப்புறம் தான் உன்னோட அருமை எனக்கு நல்லா தெரிஞ்சுது, உன்னய எனக்கு எவ்ளோ புடிக்கும்னு தெறிஞ்சுகிட்டேன். 

இந்த 3 வருஷத்துல நீ என்னய்ய நெனச்சியா இல்லையான்னு  எனக்கு தெரியாது, ஆனா நான் தினமும் ஏதாச்சும் ஒரு வழில உன்ன நெனச்சுடுவேன்.

இப்பவும் சொல்றேன் ராம், நான் உன்ன காதலிக்கிறேன்.

நீ என்ன காதலிக்க வேண்டாம், கல்யாணம் பன்னிக்கோ போதும் என்று சொல்லி முடிக்க, கண்ணில் தெரிந்த பிரதிபளிப்பு, துளிகளாக பெருகி உதிர தொடங்கியது ! (இதை கேட்டவுடன் வேலனுக்கு தென்றலிடம் தனது காதலை கூறியவுடன், அவளது கண்ணில் வந்த கண்ணீர் துளிகள் நினைவில் வந்தது - மயிர் கூச்சமுர தனது கைகளை தடவிக்கொண்டான்)

அப்பொழுது BULLET வரவில்லை, ராம் பதிலலித்தே நகர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளபட்டான் !   

மீண்டும் ஒரு அமைதி நிலவ, இம்முறை ராம் அதை உடைக்க முன்வந்தான். 

ஹே ! கண்ண தொட ! என்ன கொஞ்சம் பாரு.. 

Board Exam முடிஞ்சா  எல்லாம்  முடிஞ்சுடுச்சுன்னு நினைக்க கூடாது லதா, வாழ்க்கையே இங்கதான் தொடங்குது. 

கனவு கண்டா மட்டும் பத்தாது , அதை சாதிக்க ஒரு வெறி வேணும். 

மீண்டும் கண் கலங்க தொடங்கியது ...

கண்ண தொட மொதல்ல, எனக்கு பொண்ணுங்க அழுதாலே புடிக்காது. 

இப்போதைக்கு உன்னோட கணவ நோக்கி ஓடு., அத அடைஞ்ச அப்புறம்  திரும்பி பாரு; அப்போயும் நான் மட்டும் தான் நின்னு, நானும் அப்போ ஒரு நல்ல நிலமைல இருந்தா எல்லாம் நடக்கும். 

பொண்ணுங்கள பறக்க சொல்ற உலகத்துல, நீ நடக்க ஆச படுற !

இப்போ கூட, தவழ கஷ்ட படுற பொண்ணுங்க இருக்க தான் செய்யுராங்க. 

நீ சொல்லணும்ன்னு நினைச்சத சொல்லிட்ட; இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, எனக்கு உன்ன புடிக்காதுன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். 

இப்போ வந்து என்கிட்ட இவ்ளோ தைரியமா பேசுனால இதுவே எனக்கு புடிக்கும், உன்கிட்ட எந்த பையனும் வம்பு வச்சுக்க மாட்டான், நீ அவளோ தைரியமான பொண்ணு. ஆனா இது எல்லாமே லதா என்னோட தோழியா இருக்குறப்போ. 

இதயெல்லாம் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படிச்சு முன்னேறுற வாழிய பாக்கலாம். எல்லாம் அதுக்கு அப்புறம் தானா நடக்கும், என்று ராம் சொல்லி முடிக்க ; 

மீண்டும் ஒரு அமைதியை தவிர்த்து, பெண்களுக்கே உரிய தனி சொத்தான  - உடமை உரிமம் பெற., இதுவரை கடைபிடித்த தயக்கத்தை உடைத்து, ராம் ஒண்ணு மட்டும் சொல்லு.,

நீ வேற யாரையாச்சும் லவ் பண்றியா !? இல்ல பண்ணுனியா !? என்றாள் லதா. 



செவ்வாய், 12 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 10




ஒவ்வொருவருக்கும் ஒரு கடினமான நாள் இருக்கும்; அந்த நாள் உங்களை நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நாம் ஏன் இங்கே இப்படி வாழ்கிறோம், நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டியவர் என்று பல பிதற்றல் சிந்தனைகளை உங்களுள் விதைத்து, உங்களை அடுத்த அடி எடுக்கவைக்காமல் தேக்கநிலையடைய செய்யலாம்.

அவ்வாறான நாட்களில் நீங்கள் திருமணமானவராக இருக்கும் பட்சத்தில், ஒருவேளை இவனை அல்லது இவனை காட்டாமல் அவளோடு அல்லது அவனோடு வாழ்ந்திருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைப்பு உங்களை கடந்தாலே; உங்கள் வாழ்க்கையின் பெரும் தோல்வியை நீங்கள் அடைகிறீர்கள் என்று ஊர்ஜிதமாகிறது. 

உங்களுக்கு பிடித்த நபர் பிடித்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். சின்ன கருத்து வேறுபாடு கூட வர கூடாது என்று நீங்கள் நினைப்பவரானால் அது மூடத்தனம்.

இன்பம் துன்பம் போல, சிறு சண்டைகளும் ஒரு உறவில் தேவைப்படுகிறது. அச்சினைஞ்சிரு சண்டைகள் தான் உங்களின் புரிதலை அதிகப்படுத்தும்.

காதலிக்கும் பொழுது 3-  4 மணி நேரங்களோ கழித்த பொழுது இனித்த காதலி / காதலன், திருமணத்திற்கு பிறகு 24 மணி நேரங்கள் ஒன்றாகவே வாழும் பொழுது திகட்டுவது சகஜம்தான். 

அதை பொருட்படுத்தாமல், உங்களின் இனிய நினைவுகளை அவ்விதமான சண்டை நேரங்களில் பகிர்ந்து பேசி சிறுமை படுத்துங்கள்.

அமைதியே ஒரு உறவின் முதல் எதிரி.

இக்கருத்தில் எதிர்மறை இருந்தால், காதலித்து பாருங்கள் ! காதலித்தவளை(னை) திருமணம் செய்து பாருங்கள் !

The practicality of post love marriage life !

இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம வேலன் அப்பாவ கொஞ்சம் கவனிப்போம் !

தனது காதல் கதையை யாரிடமாவது கூறும் பொழுது, யாருக்கு தான் லயித்து போகும் ?

வேலனின் அப்பா மேலும் தொடர்ந்தார்,
லதா மற்றும் நண்பர்களுடனான நட்பு கரண்ட் கட்டான பொழுதெல்லாம் வளர்ந்தது.

நாட்கள் வேகமாக ஓடியது, எங்ககிட்ட பேசுரத்துக்காகவே லதா எங்க வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சா !

நாங்க பேசுற பேச்சு தெரு முனை வரைக்கும் கேக்கும், பாட்டு பாடி போற வாரவங்களை சாவடிப்போம், ராஜா ராணி, பாட்டுக்கு பாட்டுன்னு ஒரே கூத்தா இருக்கும்.

சில நாட்களில் நான் பம்பரம் ஆட போனா, அன்னைக்கு லதா மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எல்லாம் எங்க மாமா வீட்டுக்கு வர்ற வரைக்கும் தான். அந்த நாட்களில் அவரோட புல்லட் சத்தம் தனியா எங்களை எச்சரிக்கும், 500 மீட்டர் அந்தாண்டையே வரவை காட்டி குடுத்துடும்.
அடுத்த நொடி எல்லாம் தெரிச்சு ஓடுவோம். அவ்ளோ terror piece uh.

அப்புறம் மறுநாள் சந்திக்கையில மொதல் நாள் ஓட்டத்தை பத்தி கதை தயாரா இருக்கும். அப்போலாம் லதா இருந்தா அந்த நிமிஷம் அவ்ளோ சந்தோசமா இருக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், கையில பூஸ்ட்டோட அறைக்குள் நுழைந்த லதா; இப்போ ராசாக்கு சந்தோசமே இல்லையாக்கும் என்று ஓம்பிழுக்க, நான் அப்படி சொல்லலமா என்று ராமன் சமாளிக்க, அந்த அறை முழுவதும் சந்தோசம் படர்ந்தது.

உங்கப்பா பேச ஆரம்பிச்சா யாரா இருந்தாலும் பாத்த முதல் சந்திப்புலயே நெருக்கம் ஆகிடுவாங்க. அப்டி எவ நெருங்குனாலும் எனக்கு பத்திக்கிட்டு வரும் , அதை தனிச்சு தனிச்சு தான் தண்ணிக்குள்ள விழுந்துட்டேன் என்றாள் லதா.

அப்புறம் இது சரிப்பட்டு வராதுன்னு நானே ஒருநாள் அவரை தனியா புடிச்சு, இந்தாருங்க !
எனக்கு கட்டுனா உங்களைய தான் கட்டனும் மத்தபடி ஏதும் வேணாம், அப்டின்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்.

அப்டி சொல்லியும் இந்த கல்நெஞ்ச காரரு ஒடனே ஒத்துகிட்டாருன்னு நினைக்கிற ?

இரு இரு அந்த கதைய நான் சொல்றேன் என்று சிரிப்பு போங்க ராமன் வழக்கிழுத்தார்.

அம்முனி கட் அண்ட் ரைட்டா சொன்ன கதைய நீயே கேளு !

அன்னைக்கு ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும், அப்போதான் நானும் டியூசன் முடிச்சு வீட்டுக்கு வந்திருந்தேன், எங்க வீட்டுல பூரி போட்டு இருந்தாங்க அத்தை, அதை ஒரு கட்டு கட்டலாம்னு ஆசையா தட்டுல கை வைக்க போனேன்.

வெளிய இருந்து கீர்த்தி, ராமா ஒரு நிமிஷம் இங்க வாயேன்னு கூப்பிட, இருந்த (இரு + ந்த -  ஊரு பக்கம் பொம்பள புள்ளைங்கள, வாந்த போந்த என்று அழைப்பது வழக்கம்) சாப்பிட்டுட்டு வரேன் என்றேன்.

உங்க மாமா வந்துடுவாரு அப்புறம் என்று கூறி அவள் அழைப்பை நியாய படுத்த, நானும் கைல பூரி ஒன்ன தூக்கிக்கிட்டு வாசலுக்கு போனேன்.
நீயே சொல்லுக்கா என்றால் அபிநயா. ரெண்டு பேரும் ஏதோ சதி திட்டம் தீட்டுராளுங்க போலனு நெனச்சு, கொஞ்சம் சுதாரிப்போட சட்டுனு சொல்லுங்களேன் என்றேன்.

கரண்ட் போயிட்டு, அம்மாவாசை இருட்டு, ரெண்டு நொடில இருட்டு பழகிட்டு. அப்போதான் கீர்த்தி சொன்னா, நம்ம லதாக்கு உன் கிட்ட ஒன்னு சொல்லனுமாம், ஆனா பயமா இருக்காம் அப்படின்னா..

அவளுக்கு சொல்லனும்னா அவளே சொல்லலாமே நான் அவளுக்கும் friend தானே, எங்க அவன்னேன்.

அவ வருவா, அதுக்கு முன்ன நாங்களே சொல்லிடுறோம், அவ உன்னைய காதலிக்கிறாளாம்னா.

அம்புட்டு தான் எனக்கு வயித்துல புளிய கரச்சிடுச்சு, இதுங்க ஏதோ ஓட்டுதுங்கன்னு தோணுச்சு !

சுதாரித்து கொண்டு, என்னையலாம் யாரு love பண்ணுவா, என் மூஞ்சியும், மொகரையும். சும்மா காமெடி பண்ணாத கீர்த்தின்னேன், அபி நீயுமான்னேன் ?

இல்லடா உண்மைய தான் சொல்றோம்னாளுங்க.

அப்டியே இருக்கட்டும், ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படி நண்பர்களோ அதே மாரித்தான் லதாவும், அவ இப்படிலாம் நினைப்பான்னு நான் எதிர் பார்க்கல. காதலிக்கிற வயசா இது ? எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு, எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு அதெல்லாம் அடைஞ்சாதான் நான் காதலை பத்திலாம் சிந்திக்க கூட முடியும்.
அவ வரட்டும் நான் பேசுறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், ஒரு இடி இடிக்க தொடங்கியதற்கும், கரண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது.

நான் சாஞ்சிருந்த சேவுத்துக்கு அந்த பக்கமிருந்து ஒரு திடீர் விம்மல் சத்தம், யாருன்னு எட்டி பார்த்தா, லதா !

எனக்கு பகீர்னு ஆச்சு ! திக்குமுக்காடி போயிட்டேன் !

ஹிரோஷிமா நாகசாகியின் மீது அமெரிக்கா பயன்படுத்திய குண்டைவிட மோசமானது ஒரு பெண்ணின் கண்ணீர் !

அணுவணுவாய் உங்களை சிந்திக்க செய்து, மண்டியிட செய்யும் வல்லமை வாய்ந்தது !

காத்திருங்கள் ! ராம கிருஷ்ணன் சற்று அந்த நினைவலைகளில் நீந்தட்டும் !

திங்கள், 11 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 9




இடைப்பட்ட காலத்தில் இக்கதையை தொடராமைக்கு மன்னிக்கவும்.

இக்கதையின் தொடர்ச்சி என் வாழ்வியலில் இணைந்திருப்பதால் வந்த தாமதம் !

பல முடிவுகளை நான் கடந்தமையால், இனி இதுபோன்ற தாமதம் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு தொடர்வோம் !

காதல் மிக அழகானது, அது யாருக்கு வேண்டுமானாலும் ; யார் மீதேனும் ; எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். 

காதலர்களுக்கு அவர்களின் காதலும் காதலியும் மிதமிஞ்சிய அழகாக தெரிகிறார்கள் !

சாலையில் கடக்கும் காதலர்களை பார்த்து பலரும் விமர்சிப்பது உண்டு. (இது எங்க உருப்புட போகுது, ஆளும் மூஞ்சியும் மண்டையும், எப்படி போகுது பாரு, இதுங்கள சொல்லி தப்பில்ல; இதுங்க வளர்ப்பு அப்படி)

இவ்வாறு காதலிப்பவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமர்சித்து தங்களின் செல்வ மகளை யாரென்றே தெரியாத (நன்றாக சம்பாரிக்கும் பொறுப்புள்ளவன் என்ற ஒரே காரணத்தால்) ஒருவனின் கரம் பிடித்து அவனோடு தேன் நிலவுக்கு அனுப்பி வைக்கும் உங்களை விட அவர்கள் பன்மடங்கு சிறந்தவர்கள்.

(மேல் கண்ட வரிகள், திருமணத்தின்  முடிவுகளை  தனது மகளுடன் கலந்து ஆலோசித்து, அவளது வாழ்வின் முடிவுகளை அவளை சுதந்திரமாக எடுக்க செய்த பெற்றோர்களுக்கானது அல்ல)

அது போன்ற விமர்சனங்கள் அவர்களை எவ்விததிலும் சென்றடைய போவதில்லை. காதலில் லயித்த அவர்கள் உங்களை ஒருபொழுதும் பொருட்படுத்த போவதில்லை. 

அவர்கள் உங்களை நோக்கும் தருவாயில், உங்கள் மீதான அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்று மட்டும் சற்று யோசிக்கலாம். 

(தெருவில் தெரியும் நாய்களுக்கு சிலர் பெயர் வைக்க, அந்த நாய்கள் அவர்களுக்குள் என்ன பெயர் வைதிருக்கும் என்று நினைத்து பார்ப்பது போல)

அதை விடுங்கள் .. நாம் வேலனை எழுப்புவோம் !

மயங்கிய அன்றிரவு  பால்கனியில் முடிய, சில மணி நேர தூக்கதிற்க்கு பிறகு வேலன் எழுந்தான். 

அவன் அருகில் அவன் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்; என்னடா ஆச்சு உனக்கு, பால்கனில ஏன்  போயி படுப்ப ? அதும்  ஹெட்போனோட ? 

யாரோ தென்றலாம், அந்த புள்ள இதுவரைக்கும் 5 - 6 தடவ போன் பண்ணிட்டு ; நீ எப்டி இருக்க; எழுந்தாச்சான்னு கேட்டுச்சு !

நீ எதுக்குமா எனக்கு வர்ற போன்லாம் எடுக்குற !

ஆமா அது பாட்டுக்கும் அடிச்சுட்டே கடந்துச்சேன்னு எடுத்தேன் பாரு எனக்கிது தேவதான்டா !

இதை காதில் வாங்கியவாறு, தனது அலைபேசியின் இன்பாக்ஸை நோண்டினான், 

3 messages from தென்றல், என்றிருக்க அதை திறக்கலானான்.

தென்றல்  : Sorry vela, I was in a deep sleep then when you called me. Hope you are fine !

தென்றல்  : Extremely sorry, I don't even remember what we spoke over phone last night. This is may be due to the pills I consumed. Call me if urgent.

தென்றல் : Forgot to tell, Sorry ! Good morning Da ! Meet you in college 😊

இதை பார்த்து முடிப்பதற்குள், வேலனின் அம்மா, "நீ இன்னக்கி காலேஜ் போக வேண்டாம்" ஒழுங்கா போன் நோண்டாம படுத்து தூங்கி எழு, நாளக்கி எல்லாம் சரி ஆகிடும் என்றாள்.

அதெல்லாம் இல்லம்மா நான் இன்னக்கி காலேஜ் போயி ஆகனும், Lab இருக்கு அப்புறம் practicals ல internal marks இல்லாம போயிடும் என்று கூறி எழ முயன்றான்.

எழ முயன்ற அடுத்த நொடி, ஒரு low sugar மயக்கம் வர, மீண்டும் படுக்கையில் மல்லாந்தான்.

இதை கண்டவுடன், வேலா அம்மா சொன்னா கேளு, உனக்கு ரொம்ப Tired ஆஹ் இருக்கு.

இன்னைக்கு ஒழுங்கா rest எடு அப்போதான் நாளைக்காச்சும் காலேஜ் போக முடியும் என்று சொல்ல, மறுப்பு தெரிவிக்கும் சக்தியை கூட வேலன் இழந்திருந்தான்.

அம்மா போயி வெந்தய கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன், அது வரைக்கும் படுத்திரு ; அப்பா இங்க இருப்பாரு.

கஞ்சிலாம் அப்பறம் வைக்கலாம், மொதல்ல அவனுக்கு ஒரு boost போட்டு குடு என்றார் வேலனின் அப்பா.

Boost போட அம்மா நகர, அறையில் ஒரு அமைதி நிலவியது.

இதற்கிடையில், வேலன் அவன் பங்கிற்கு தென்றலுக்கு குறிஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தான்.

வேலன் : Missed this good morning for a while ! I am still sick. Taking leave today. Will see you soon in college. Take care.

என்று சொடுக்கி பொன்முறுவல் ஒன்றை அடக்க முயல, அவன் அப்பா அதை கவனிக்காமல் இல்லை.

அவரை திசைதிருப்ப, அப்பா நீங்க office போல ? என்றான் வேலன்.

உனக்கு உடம்பு முடியலனு லீவு போட்டுட்டேன் என்றார் அவர்.

மீண்டும் ஒரு அமைதி நிலவ, அமைதியை கலைக்க, 

அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் Love Marriage தான, எப்போ எப்படி அம்மாவ நீங்க first பாத்தீங்க, யாரு first love சொன்னா, உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்க அப்பா என்றான்.

ஒரு நொடி பிரகாசத்தோடு, நானும் உன் அம்மாவும் 16 வருஷம் love பண்ணி கல்யாணம் செஞ்சுகிட்டோம். லதாவை கல்யாணம் பண்றதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே, அப்பப்பா ; இப்போ நெனச்சாலும் வயித்தை கலக்குது !

லதாவை நான் மொதல்ல அவங்க வீட்ல தான் பார்த்தேன். அப்போலாம் எங்க வீட்ல இருந்து பள்ளிக்கூடம் தூரமா இருந்துச்சு. தினமும் கூட்ட நெரிசல்ல போயிட்டு வரவே நேரம் சரியா இருந்துச்சு.

படிக்க வச்சா என்னையும் உன் பெரியப்பன்னையும் english mediumல தான் படிக்க வைப்பேன்னு ஒரு வைராக்கியம் உன் தாத்தா பாட்டிக்கு.

அப்போதான் எங்க மாமா பெந்தகத்துக்கு வீடு எடுத்து அவரு பொண்ண படிக்க வைக்க பள்ளிக்கூடம் பக்கமாவே குடி போனாரு.

உடனே என்னய அங்க அனுப்பி அங்கேர்ந்து படிக்க வச்சாங்க. அந்த தெரு முனையில தான் லதா வீடு இருந்துச்சு. அப்போலாம் அடிக்கடி கரண்ட் கட் ஆகும். லதா வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் நாங்க டியூசன் படிச்சுட்டு இருந்தோம்.

கரண்ட் கட் ஆனா போதும் எங்களுக்குலாம் ஒரே கொண்டாட்டம் தான். ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். நான், அருண், கீர்த்தனா, அபிநயா, லதான்னு ஒக்காந்து பேசிட்டு இருப்போம்.

அப்டி பேசி பேசி தான் எங்க நட்பு பலமாச்சு.

பழக தொடங்கின நாட்கள்ல உங்கம்மா பேரு ஸ்வர்ணலதான்னு எனக்கு தெரியாது. எல்லாரும் லதா லதான்னு கூப்டுறதுனால, நான் அதான் அவா முழு பெயருன்னு நெனச்சுட்டு இருந்தன்.

அவங்க அப்பா ஊருக்கு போனதுனால, அவ ஸ்கூல் டூர் போக அவர்கிட்ட அனுமதி கடித்துல கையெழுத்து வாங்கி வச்சுருந்தா, அதுல ஸ்வர்ணலதான்னு பெயர பாத்துட்டு நான் யாரோடதோ கீழ கெடக்குன்னு எடுத்து கிழிச்சு போட, அவ ஒப்பாரி வைக்க, நான் அவங்க அப்பா கையெழுத்தை போட்டு டூர் அனுப்பி வச்சு மோதல்ல தொடங்குச்சு எங்க நட்பு.

டூர்  போயிட்டு  வரட்டும் கொஞ்சம் காத்திருங்கள் !