செவ்வாய், 12 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 10




ஒவ்வொருவருக்கும் ஒரு கடினமான நாள் இருக்கும்; அந்த நாள் உங்களை நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நாம் ஏன் இங்கே இப்படி வாழ்கிறோம், நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டியவர் என்று பல பிதற்றல் சிந்தனைகளை உங்களுள் விதைத்து, உங்களை அடுத்த அடி எடுக்கவைக்காமல் தேக்கநிலையடைய செய்யலாம்.

அவ்வாறான நாட்களில் நீங்கள் திருமணமானவராக இருக்கும் பட்சத்தில், ஒருவேளை இவனை அல்லது இவனை காட்டாமல் அவளோடு அல்லது அவனோடு வாழ்ந்திருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைப்பு உங்களை கடந்தாலே; உங்கள் வாழ்க்கையின் பெரும் தோல்வியை நீங்கள் அடைகிறீர்கள் என்று ஊர்ஜிதமாகிறது. 

உங்களுக்கு பிடித்த நபர் பிடித்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். சின்ன கருத்து வேறுபாடு கூட வர கூடாது என்று நீங்கள் நினைப்பவரானால் அது மூடத்தனம்.

இன்பம் துன்பம் போல, சிறு சண்டைகளும் ஒரு உறவில் தேவைப்படுகிறது. அச்சினைஞ்சிரு சண்டைகள் தான் உங்களின் புரிதலை அதிகப்படுத்தும்.

காதலிக்கும் பொழுது 3-  4 மணி நேரங்களோ கழித்த பொழுது இனித்த காதலி / காதலன், திருமணத்திற்கு பிறகு 24 மணி நேரங்கள் ஒன்றாகவே வாழும் பொழுது திகட்டுவது சகஜம்தான். 

அதை பொருட்படுத்தாமல், உங்களின் இனிய நினைவுகளை அவ்விதமான சண்டை நேரங்களில் பகிர்ந்து பேசி சிறுமை படுத்துங்கள்.

அமைதியே ஒரு உறவின் முதல் எதிரி.

இக்கருத்தில் எதிர்மறை இருந்தால், காதலித்து பாருங்கள் ! காதலித்தவளை(னை) திருமணம் செய்து பாருங்கள் !

The practicality of post love marriage life !

இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம வேலன் அப்பாவ கொஞ்சம் கவனிப்போம் !

தனது காதல் கதையை யாரிடமாவது கூறும் பொழுது, யாருக்கு தான் லயித்து போகும் ?

வேலனின் அப்பா மேலும் தொடர்ந்தார்,
லதா மற்றும் நண்பர்களுடனான நட்பு கரண்ட் கட்டான பொழுதெல்லாம் வளர்ந்தது.

நாட்கள் வேகமாக ஓடியது, எங்ககிட்ட பேசுரத்துக்காகவே லதா எங்க வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சா !

நாங்க பேசுற பேச்சு தெரு முனை வரைக்கும் கேக்கும், பாட்டு பாடி போற வாரவங்களை சாவடிப்போம், ராஜா ராணி, பாட்டுக்கு பாட்டுன்னு ஒரே கூத்தா இருக்கும்.

சில நாட்களில் நான் பம்பரம் ஆட போனா, அன்னைக்கு லதா மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எல்லாம் எங்க மாமா வீட்டுக்கு வர்ற வரைக்கும் தான். அந்த நாட்களில் அவரோட புல்லட் சத்தம் தனியா எங்களை எச்சரிக்கும், 500 மீட்டர் அந்தாண்டையே வரவை காட்டி குடுத்துடும்.
அடுத்த நொடி எல்லாம் தெரிச்சு ஓடுவோம். அவ்ளோ terror piece uh.

அப்புறம் மறுநாள் சந்திக்கையில மொதல் நாள் ஓட்டத்தை பத்தி கதை தயாரா இருக்கும். அப்போலாம் லதா இருந்தா அந்த நிமிஷம் அவ்ளோ சந்தோசமா இருக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், கையில பூஸ்ட்டோட அறைக்குள் நுழைந்த லதா; இப்போ ராசாக்கு சந்தோசமே இல்லையாக்கும் என்று ஓம்பிழுக்க, நான் அப்படி சொல்லலமா என்று ராமன் சமாளிக்க, அந்த அறை முழுவதும் சந்தோசம் படர்ந்தது.

உங்கப்பா பேச ஆரம்பிச்சா யாரா இருந்தாலும் பாத்த முதல் சந்திப்புலயே நெருக்கம் ஆகிடுவாங்க. அப்டி எவ நெருங்குனாலும் எனக்கு பத்திக்கிட்டு வரும் , அதை தனிச்சு தனிச்சு தான் தண்ணிக்குள்ள விழுந்துட்டேன் என்றாள் லதா.

அப்புறம் இது சரிப்பட்டு வராதுன்னு நானே ஒருநாள் அவரை தனியா புடிச்சு, இந்தாருங்க !
எனக்கு கட்டுனா உங்களைய தான் கட்டனும் மத்தபடி ஏதும் வேணாம், அப்டின்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்.

அப்டி சொல்லியும் இந்த கல்நெஞ்ச காரரு ஒடனே ஒத்துகிட்டாருன்னு நினைக்கிற ?

இரு இரு அந்த கதைய நான் சொல்றேன் என்று சிரிப்பு போங்க ராமன் வழக்கிழுத்தார்.

அம்முனி கட் அண்ட் ரைட்டா சொன்ன கதைய நீயே கேளு !

அன்னைக்கு ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும், அப்போதான் நானும் டியூசன் முடிச்சு வீட்டுக்கு வந்திருந்தேன், எங்க வீட்டுல பூரி போட்டு இருந்தாங்க அத்தை, அதை ஒரு கட்டு கட்டலாம்னு ஆசையா தட்டுல கை வைக்க போனேன்.

வெளிய இருந்து கீர்த்தி, ராமா ஒரு நிமிஷம் இங்க வாயேன்னு கூப்பிட, இருந்த (இரு + ந்த -  ஊரு பக்கம் பொம்பள புள்ளைங்கள, வாந்த போந்த என்று அழைப்பது வழக்கம்) சாப்பிட்டுட்டு வரேன் என்றேன்.

உங்க மாமா வந்துடுவாரு அப்புறம் என்று கூறி அவள் அழைப்பை நியாய படுத்த, நானும் கைல பூரி ஒன்ன தூக்கிக்கிட்டு வாசலுக்கு போனேன்.
நீயே சொல்லுக்கா என்றால் அபிநயா. ரெண்டு பேரும் ஏதோ சதி திட்டம் தீட்டுராளுங்க போலனு நெனச்சு, கொஞ்சம் சுதாரிப்போட சட்டுனு சொல்லுங்களேன் என்றேன்.

கரண்ட் போயிட்டு, அம்மாவாசை இருட்டு, ரெண்டு நொடில இருட்டு பழகிட்டு. அப்போதான் கீர்த்தி சொன்னா, நம்ம லதாக்கு உன் கிட்ட ஒன்னு சொல்லனுமாம், ஆனா பயமா இருக்காம் அப்படின்னா..

அவளுக்கு சொல்லனும்னா அவளே சொல்லலாமே நான் அவளுக்கும் friend தானே, எங்க அவன்னேன்.

அவ வருவா, அதுக்கு முன்ன நாங்களே சொல்லிடுறோம், அவ உன்னைய காதலிக்கிறாளாம்னா.

அம்புட்டு தான் எனக்கு வயித்துல புளிய கரச்சிடுச்சு, இதுங்க ஏதோ ஓட்டுதுங்கன்னு தோணுச்சு !

சுதாரித்து கொண்டு, என்னையலாம் யாரு love பண்ணுவா, என் மூஞ்சியும், மொகரையும். சும்மா காமெடி பண்ணாத கீர்த்தின்னேன், அபி நீயுமான்னேன் ?

இல்லடா உண்மைய தான் சொல்றோம்னாளுங்க.

அப்டியே இருக்கட்டும், ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படி நண்பர்களோ அதே மாரித்தான் லதாவும், அவ இப்படிலாம் நினைப்பான்னு நான் எதிர் பார்க்கல. காதலிக்கிற வயசா இது ? எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு, எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு அதெல்லாம் அடைஞ்சாதான் நான் காதலை பத்திலாம் சிந்திக்க கூட முடியும்.
அவ வரட்டும் நான் பேசுறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், ஒரு இடி இடிக்க தொடங்கியதற்கும், கரண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது.

நான் சாஞ்சிருந்த சேவுத்துக்கு அந்த பக்கமிருந்து ஒரு திடீர் விம்மல் சத்தம், யாருன்னு எட்டி பார்த்தா, லதா !

எனக்கு பகீர்னு ஆச்சு ! திக்குமுக்காடி போயிட்டேன் !

ஹிரோஷிமா நாகசாகியின் மீது அமெரிக்கா பயன்படுத்திய குண்டைவிட மோசமானது ஒரு பெண்ணின் கண்ணீர் !

அணுவணுவாய் உங்களை சிந்திக்க செய்து, மண்டியிட செய்யும் வல்லமை வாய்ந்தது !

காத்திருங்கள் ! ராம கிருஷ்ணன் சற்று அந்த நினைவலைகளில் நீந்தட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக