திங்கள், 11 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 9




இடைப்பட்ட காலத்தில் இக்கதையை தொடராமைக்கு மன்னிக்கவும்.

இக்கதையின் தொடர்ச்சி என் வாழ்வியலில் இணைந்திருப்பதால் வந்த தாமதம் !

பல முடிவுகளை நான் கடந்தமையால், இனி இதுபோன்ற தாமதம் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு தொடர்வோம் !

காதல் மிக அழகானது, அது யாருக்கு வேண்டுமானாலும் ; யார் மீதேனும் ; எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். 

காதலர்களுக்கு அவர்களின் காதலும் காதலியும் மிதமிஞ்சிய அழகாக தெரிகிறார்கள் !

சாலையில் கடக்கும் காதலர்களை பார்த்து பலரும் விமர்சிப்பது உண்டு. (இது எங்க உருப்புட போகுது, ஆளும் மூஞ்சியும் மண்டையும், எப்படி போகுது பாரு, இதுங்கள சொல்லி தப்பில்ல; இதுங்க வளர்ப்பு அப்படி)

இவ்வாறு காதலிப்பவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமர்சித்து தங்களின் செல்வ மகளை யாரென்றே தெரியாத (நன்றாக சம்பாரிக்கும் பொறுப்புள்ளவன் என்ற ஒரே காரணத்தால்) ஒருவனின் கரம் பிடித்து அவனோடு தேன் நிலவுக்கு அனுப்பி வைக்கும் உங்களை விட அவர்கள் பன்மடங்கு சிறந்தவர்கள்.

(மேல் கண்ட வரிகள், திருமணத்தின்  முடிவுகளை  தனது மகளுடன் கலந்து ஆலோசித்து, அவளது வாழ்வின் முடிவுகளை அவளை சுதந்திரமாக எடுக்க செய்த பெற்றோர்களுக்கானது அல்ல)

அது போன்ற விமர்சனங்கள் அவர்களை எவ்விததிலும் சென்றடைய போவதில்லை. காதலில் லயித்த அவர்கள் உங்களை ஒருபொழுதும் பொருட்படுத்த போவதில்லை. 

அவர்கள் உங்களை நோக்கும் தருவாயில், உங்கள் மீதான அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்று மட்டும் சற்று யோசிக்கலாம். 

(தெருவில் தெரியும் நாய்களுக்கு சிலர் பெயர் வைக்க, அந்த நாய்கள் அவர்களுக்குள் என்ன பெயர் வைதிருக்கும் என்று நினைத்து பார்ப்பது போல)

அதை விடுங்கள் .. நாம் வேலனை எழுப்புவோம் !

மயங்கிய அன்றிரவு  பால்கனியில் முடிய, சில மணி நேர தூக்கதிற்க்கு பிறகு வேலன் எழுந்தான். 

அவன் அருகில் அவன் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்; என்னடா ஆச்சு உனக்கு, பால்கனில ஏன்  போயி படுப்ப ? அதும்  ஹெட்போனோட ? 

யாரோ தென்றலாம், அந்த புள்ள இதுவரைக்கும் 5 - 6 தடவ போன் பண்ணிட்டு ; நீ எப்டி இருக்க; எழுந்தாச்சான்னு கேட்டுச்சு !

நீ எதுக்குமா எனக்கு வர்ற போன்லாம் எடுக்குற !

ஆமா அது பாட்டுக்கும் அடிச்சுட்டே கடந்துச்சேன்னு எடுத்தேன் பாரு எனக்கிது தேவதான்டா !

இதை காதில் வாங்கியவாறு, தனது அலைபேசியின் இன்பாக்ஸை நோண்டினான், 

3 messages from தென்றல், என்றிருக்க அதை திறக்கலானான்.

தென்றல்  : Sorry vela, I was in a deep sleep then when you called me. Hope you are fine !

தென்றல்  : Extremely sorry, I don't even remember what we spoke over phone last night. This is may be due to the pills I consumed. Call me if urgent.

தென்றல் : Forgot to tell, Sorry ! Good morning Da ! Meet you in college 😊

இதை பார்த்து முடிப்பதற்குள், வேலனின் அம்மா, "நீ இன்னக்கி காலேஜ் போக வேண்டாம்" ஒழுங்கா போன் நோண்டாம படுத்து தூங்கி எழு, நாளக்கி எல்லாம் சரி ஆகிடும் என்றாள்.

அதெல்லாம் இல்லம்மா நான் இன்னக்கி காலேஜ் போயி ஆகனும், Lab இருக்கு அப்புறம் practicals ல internal marks இல்லாம போயிடும் என்று கூறி எழ முயன்றான்.

எழ முயன்ற அடுத்த நொடி, ஒரு low sugar மயக்கம் வர, மீண்டும் படுக்கையில் மல்லாந்தான்.

இதை கண்டவுடன், வேலா அம்மா சொன்னா கேளு, உனக்கு ரொம்ப Tired ஆஹ் இருக்கு.

இன்னைக்கு ஒழுங்கா rest எடு அப்போதான் நாளைக்காச்சும் காலேஜ் போக முடியும் என்று சொல்ல, மறுப்பு தெரிவிக்கும் சக்தியை கூட வேலன் இழந்திருந்தான்.

அம்மா போயி வெந்தய கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன், அது வரைக்கும் படுத்திரு ; அப்பா இங்க இருப்பாரு.

கஞ்சிலாம் அப்பறம் வைக்கலாம், மொதல்ல அவனுக்கு ஒரு boost போட்டு குடு என்றார் வேலனின் அப்பா.

Boost போட அம்மா நகர, அறையில் ஒரு அமைதி நிலவியது.

இதற்கிடையில், வேலன் அவன் பங்கிற்கு தென்றலுக்கு குறிஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தான்.

வேலன் : Missed this good morning for a while ! I am still sick. Taking leave today. Will see you soon in college. Take care.

என்று சொடுக்கி பொன்முறுவல் ஒன்றை அடக்க முயல, அவன் அப்பா அதை கவனிக்காமல் இல்லை.

அவரை திசைதிருப்ப, அப்பா நீங்க office போல ? என்றான் வேலன்.

உனக்கு உடம்பு முடியலனு லீவு போட்டுட்டேன் என்றார் அவர்.

மீண்டும் ஒரு அமைதி நிலவ, அமைதியை கலைக்க, 

அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் Love Marriage தான, எப்போ எப்படி அம்மாவ நீங்க first பாத்தீங்க, யாரு first love சொன்னா, உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்க அப்பா என்றான்.

ஒரு நொடி பிரகாசத்தோடு, நானும் உன் அம்மாவும் 16 வருஷம் love பண்ணி கல்யாணம் செஞ்சுகிட்டோம். லதாவை கல்யாணம் பண்றதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே, அப்பப்பா ; இப்போ நெனச்சாலும் வயித்தை கலக்குது !

லதாவை நான் மொதல்ல அவங்க வீட்ல தான் பார்த்தேன். அப்போலாம் எங்க வீட்ல இருந்து பள்ளிக்கூடம் தூரமா இருந்துச்சு. தினமும் கூட்ட நெரிசல்ல போயிட்டு வரவே நேரம் சரியா இருந்துச்சு.

படிக்க வச்சா என்னையும் உன் பெரியப்பன்னையும் english mediumல தான் படிக்க வைப்பேன்னு ஒரு வைராக்கியம் உன் தாத்தா பாட்டிக்கு.

அப்போதான் எங்க மாமா பெந்தகத்துக்கு வீடு எடுத்து அவரு பொண்ண படிக்க வைக்க பள்ளிக்கூடம் பக்கமாவே குடி போனாரு.

உடனே என்னய அங்க அனுப்பி அங்கேர்ந்து படிக்க வச்சாங்க. அந்த தெரு முனையில தான் லதா வீடு இருந்துச்சு. அப்போலாம் அடிக்கடி கரண்ட் கட் ஆகும். லதா வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் நாங்க டியூசன் படிச்சுட்டு இருந்தோம்.

கரண்ட் கட் ஆனா போதும் எங்களுக்குலாம் ஒரே கொண்டாட்டம் தான். ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். நான், அருண், கீர்த்தனா, அபிநயா, லதான்னு ஒக்காந்து பேசிட்டு இருப்போம்.

அப்டி பேசி பேசி தான் எங்க நட்பு பலமாச்சு.

பழக தொடங்கின நாட்கள்ல உங்கம்மா பேரு ஸ்வர்ணலதான்னு எனக்கு தெரியாது. எல்லாரும் லதா லதான்னு கூப்டுறதுனால, நான் அதான் அவா முழு பெயருன்னு நெனச்சுட்டு இருந்தன்.

அவங்க அப்பா ஊருக்கு போனதுனால, அவ ஸ்கூல் டூர் போக அவர்கிட்ட அனுமதி கடித்துல கையெழுத்து வாங்கி வச்சுருந்தா, அதுல ஸ்வர்ணலதான்னு பெயர பாத்துட்டு நான் யாரோடதோ கீழ கெடக்குன்னு எடுத்து கிழிச்சு போட, அவ ஒப்பாரி வைக்க, நான் அவங்க அப்பா கையெழுத்தை போட்டு டூர் அனுப்பி வச்சு மோதல்ல தொடங்குச்சு எங்க நட்பு.

டூர்  போயிட்டு  வரட்டும் கொஞ்சம் காத்திருங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக