சனி, 30 டிசம்பர், 2017
என் ஊர் பயணம்
செவ்வாய், 19 டிசம்பர், 2017
கடற்கரைச் சுவடுகள்
திங்கள், 11 டிசம்பர், 2017
வீழும் பாரதிகள்
வாழ உண்ணாமல்; உண்ண வாழ்கையில்,
தன் அடைப்பை நீக்க தெரியாத இதயத் தமணி,
இனமொன்று பினமாக ,
கணம் கணம் சினம் ஏற,
விசைப்படகுகள் ஏந்திய தோட்டாக்கள் தான் எத்துனை !
அவனை வைத்து சாதுர்ய சதுரம் ஆடும் மத்தியன்,
போராடும் பாரதிகள்,
பிடி மிதித்தே சாகலாம் !
#வினித் மணிமாறன்
சனி, 9 டிசம்பர், 2017
80ஆம் பிறந்தநாள் வாழ்த்துரை
வீரம்மா பெற்றெடுத்தாள்,
வீரமாய் பெற்றெடுத்தாள்!
தகப்பனின் தனிச்சொத்து,
செல்வமாய் பெற்றெடுத்து,
செல்லமாய் இவர் வளர,
செந்தில்நாதனும் பூரித்திருப்பான் !
பழநியின் வேல் கண்டு !
செறுப்பற்ற நடை , செருகற்ற குணம்,
இவ்விரண்டும் இவர் இயல்பு !
தந்தை தாயறிய,
வேலனுக்கு வள்ளி வந்தாள்,
இருவரை கவனிக்க;
இருமூன்றை பெற்றெடுத்தாள்,
இரும்பின் இயற்பியல் !
பெயரன் பெயர்திக்கு,
சோறூட்ட பிசைகையில்,
அண்ணமும் தேன் ஏறும்,
அனுதினமும் நாவூரும்,
அதட்டி தொடை கில்லையிலும்,
தட்டி பொறை நீக்கயிலும்,
இவள் பித்தம்,
வேண்டும் நித்தம் !
புகையாடுப்பு மூட்டையிலும்,
புகையிலையை உருட்டையிலும்,
கூன் கிழமும் கோகிலம் தான் !
பத்தை தீட்டினாலும்,
நான் பத்திரைக்க திட்டினாலும்;
அன்னமொத்த குணவதி,
திண்ணம் அதை நினைவரியும் !
எம்புட்டு வளர்ந்தாலும்,
என் வாயூட்ட நீர் வேண்டும்,
நீர் கடந்த எண்பத்து பத்தாது ,
என் பிள்ளை பத்து வரை,
பாத்திருந்து கொல் அடைக !
#வினித் மணிமாறன்





