செவ்வாய், 19 டிசம்பர், 2017

கடற்கரைச் சுவடுகள்




அவள் நினைவில்

நிழலிலமர்ந்த வேளை

சோடிகள் கூடக்கான

கோடி காதல் கண்டும்

ஆழி ஆவென்றிறைந்தது... 

வீழும் சூரியொளி

ஆழிக்கரையோரம் பதிந்த 

சுவடுகளில் நிழல் நிரப்புகிறது ... 

அசைக்கும் குளிர்நீர் பாதங்களை 

நனைத்தும் நுரைத்தும் அசையா 

துளிமண்ணாய் மன்னவன்... 

திடீரென உயிர் பெற்ற சவமாய் 

திடுக்கிட்டு திரும்புகிறான்... 

மன்னவள் பெயருடைய சிறுமியை 

யாரோ ஒரு தாய் உவரும் காற்றில் 

உராயாமல் கரைக்க....

#வினித்_மணிமாறன்

1 கருத்து: