திங்கள், 11 டிசம்பர், 2017

வீழும் பாரதிகள்


வயிற்றின் தாகம் தீர்க்க மண்ணில் ஏரிழுத்தவன்,
ஏறித் தொங்கியும்; அவ்வெடை உணராத தூக்கு கயிறு,

சுழலும் பூமியில் நகரா நகரனாய்,
வாழ உண்ணாமல்; உண்ண வாழ்கையில்,
தன் அடைப்பை நீக்க தெரியாத இதயத் தமணி,

இந்நாட்டான் இழிவடைந்தான் கடல்கடந்து ,
இனமொன்று பினமாக ,
கணம் கணம் சினம் ஏற,

இவ்வெரிச்சல் போதாதென, வலையவன் வீசயில்,
விசைப்படகுகள் ஏந்திய தோட்டாக்கள் தான் எத்துனை !

இதைப் பேச , செவுடனான மாநிலன்,
அவனை வைத்து சாதுர்ய சதுரம் ஆடும் மத்தியன்,

இதற்கிடையில் பிடிமண்ணுக்கும் கை விரித்த காவிரிக்கும்
போராடும் பாரதிகள்,

பிடி மிதித்தே சாகலாம் !


#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக