சனி, 30 டிசம்பர், 2017

என் ஊர் பயணம்




தைத்த நூல் தளர்ந்து காற்றை கதர் கடக்க செய்ய,

தலை கோதிய பொதிகையவள் புது காட்சி நித்தம்தர,

காற்றின் குளிர்ச்சியில் நினைவது சுத்தம் பெற,

உரைக்காற்றின் உருக்கம் உருகாமல் இறுக்கி வைக்க,

சூத்திரம் மறந்தது , என்னவள் காட்டும் புவியின் திறம் காண;

வரவேற்ற கொதிக் காப்பி நாவில் வார கணக்காக மரவுதந்த நினைவு; மறவுர

புகைவண்டிக்கே புகை ஏற்றும் புனிதப் பயணியின் நடுவில்,

அவ்வூர் இவ்வூர் என பெரும் கூச்சலுக்கிடையில்

ஊறும் உறக்கமற்ற உறைப்பொருள் நான்...


#வினித் மணிமாறன்

2 கருத்துகள்: