புதன், 29 நவம்பர், 2017

அவனது விழி


மலைமுகட்டில் அவன் மடியில்

மடிந்த கணம்,

வீழ்க்கதிரின் வீரியம் விழித்திரைக்கு விக்கல் தர,

விரியும் கருவிழியில் கதிரவனும்,

கார்முகில் தான் !

இமையது இமையுற இதயதிர்வு இன்மையாகும் !

பன்மை இருந்தும் இவ்வொருத்தியின் ஒருமை தேடும்,

கதகதப்பிற்குக் கோர்தாலும் ,

கதைகதைக்கக் கோர்த்தாலும் ,

கை ரேகை கரைந்தினையும்,

கவியனவனின் கண் காட்சியில்!

#வினித் மணிமாறன்

செவ்வாய், 28 நவம்பர், 2017

மழையில் காதலி


நின்னை நினைத்து,
பாருலகம் நனைக்கும்;
கார்கால மழையும்,
பேர் காலம் சென்ற தாயாய்,
ஏக்கம் கொள்கையில்,
மழை தன் உயிர் துறந்ததன்,
ஆயுள் விரக்தி பெற,
மழையை நனைக்க சென்றாயோ !
#வினித் மணிமாறன்

என்னவள்


என் வலைப்பதிவின் பதிவவள் ,

என் தீ கண்ட திரௌபதியும் அவள் !

காணகண்ட கண்ணகி அவள்,

நான் கனாக்கொண்ட கவிதைவள் !

நிலா மூடும் மேகம் அவள் ,

விழும் மழையின் தேகம் அவள் !

பிறைகாணா நிலவும் அவள்,

பிறர் காணா அழகின் சிலவும் அவள் !

கதிரவன் காண செழுக்கும் செந்நெல் கதிரவள் !

சினம்கொண்ட சிங்கம் அவள் ,

இனம்காணா அங்கம் அவள் !

தங்கம் செரிக்கும் அணியவள்,

என்கண் உவமை சேர்க்கும் அணி அவள் ~ என்னவள்

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

பாரதி ~ மாத்தமிழ் கவி


பிறப்பு எனும் சிறப்பினை எய்தி,

பொறுப்பு எனும் வெறுப்பினைத் தாங்கி,

சிரிப்பு எனும் செழுமையை மறந்து,

தமிழனாக தமிழை இறைந்து,

இறப்பு எனும் முழுமையை அடைந்தான்; பாரதி !

பிடி மிதித்து தமிழ் இறந்தது அன்று ! ஆனால்,

படிக்கும் தமிழே மறந்தது இன்று ! 

இயலிசையில் சிறந்த எம்தமிழ்,

என்றும் உங்கள் அயல் அசையில் அடங்காது ! 

இன்று தூங்கும் செந்தமிழ் மொழி !

ஒருநாள் ஓங்கும்,

அன்று.....

இச்செந்தமிழனின் கை அதைத் தாங்கும் ! 

- வினித் மணிமாறன்

கண்ணாடி


பலரும் எனக்கு பொய்ப்புகழ் சூட,

என்முன் நின்றால் நானாய் நின்று,

தன்மேல் படரும் சூட்டினை,

பிம்பத்தில் கடத்தி,

என் முகம் இதுவென பளிச்சிட்டு காட்டி,

பிரதிபளிக்கும் பண்பது இருந்தும்,

பிறர் தீ பலிக்காமல்,

இதுவரை எப்பாதமும் காணாத பாதரசத்தின் பண்பு ~ கண்ணாடி

#வினித் மணிமாறன்

காதல் தோல்வி ~ மது


போதை இல்லாமல் என் ராதை செய்த அறுவை சிகிச்சைக்கு ....

நான் போதை ஏற்றுகிறேன் ~ மதுவாய் 

#வினித்_மணிமாறன்

தமிழினத் தலைவன் பிரபாகரன்


வாழ்ந்த சரித்திரம்,

வீழ்ந்தும் ஒலித்தது,

தினங்கள் ரணமாக,

இனத்தலைவன் பிணமாக,

என் இனம், ஈனம் ஆனது !

மானம் கழிந்து வீழ்ந்த பொழுதும்,

மாத்தமிழன் வருவானென்றேன் !

தமிழாயிரம் பிறப்பு கண்டும் ,

மீண்டும் பிறவாத கலியுக கர்ணன் ~ பிரபாகரன் !

#வினித் மணிமாறன்

சனி, 25 நவம்பர், 2017

பொறியியல்


எட்டில் தெரிகிறது எட்டுத்திக்கின் இயக்கவியல்,

ஆயக்கலையென எழுதப்படும் படைப்பாற்றல்,

வீழ்ந்தெழுந்த பொழுதெல்லாம் தூற்றல்கள்,

வறட்சியிலும் வருத்தமில்லை,

வறண்ட பொழுதும் வருந்தவில்லை !

விளைந்தும் வேலையில்லை ;

விலைத்தரா வேளையில்லை !

காதலும் கடந்ததுண்டு,

என் காதலிக்கும் தெரியாமல் !

குடும்பம் அறியாத விடயங்கள் பலவிருந்தும்,

நடுத்தரம் நாகரீகமென நாடும் நான்காம் வாய்ப்பாடு - பொறியியல் !

#வினித் மணிமாறன்

பெண்ணின் முதல் காதல்


நில்லாமல் பேசும் நீலகடலலை அவன் நட்பு !

அனைத்திலும் அவன் மொழி,
என் நினைவுகள் அவன் வழி !

என் சிரிப்பில் மீமிசை அவன்,
என் சோக இயலிசை அவன் !

காரணியாய் கணமிருந்து,
தோழமையில் தினமிருந்து ,

பிறப்பெண்ணிடம் அவன் பேச
என் பிரபஞ்சம் புகைந்திடுமே !

புகையதை அணைப்பதிலும்,
என் வலியதிலே அணைப்பதிலும்,
கைதேர்ந்த கள்வன் அவன் !

இது காதல் என்றுணர ,
அவன் பிரிவும் காரணியே ;

பலநட்பு பூண்டாலும் ,
சூழ்ச்சியிலே மாண்டாலும்,

அவன் காதல் பலவிருந்தும்
என் முதல் காதல் அவன்தானே !

#வினித் மணிமாறன்

கத்தி


பிறப்பின் முன் ஒரு நொடி,
இறப்பின் முன் ஒரு நொடி,

கிழிக்கும் சதை பிகுந்து,
ரத்த நாலம் களைந்து,

குருதியை தெறிக்க வல்லோன் !

பயணியின் பணியில் சற்றும் கண்ணயர்ந்தால்

நொடியில் பிளவிட்டு தண்டிக்கும்
சினவாலன் !

சினத்துடன் எதிரியிடம் எடுபொருள் இவனானால் ,

அவனாயுள் முடிபொருளும் இவனே - கத்தி....

#வினித் மணிமாறன்

வெள்ளி, 24 நவம்பர், 2017

ஆணின் முதல் காதல்


முந்நாள் வீழ்ந்த சூரியன்  உதிக்க மறக்க,

தீண்டும் தென்றலில் ஈரம் இருக்க,

எனை தாண்டும் பேதை;
விழியால் போதை ஏற்ற,
மயங்கினேன் மங்கையவள் பேரழகில் !

ஒரு நொடியில் ஆயுள் கடந்து,
ஒளி ஆண்டை ஏலனிக்க,

நொடியில் விடியலை செவியுணர,

முயன்றும் தோற்றேன் அவளை தொடர ;

மங்கும் ஒளியில் அவள் உருவம் படர,
வீழும் விண்மீனாய் மறைந்தாலும்,

அவள் எந்தன் முதல் காதலே !

#வினித் மணிமாறன்

பொய்யான நட்பு


கண்முன் இழித்து, என்பின் பழித்து,

என்னை பிறரிடம் இகழும் நண்பா !

உன்மை மிளிர உடைகிறேன் நான் ,

உன் மை கரைந்த கறையடா நீ !

பலருடன் கரைந்தாலும், சிலருடன் இணைந்தாலும்,

நீ கறையுரும் நாள் என்னிடம் வா !

#வினித் மணிமாறன்

ஒருதலை காதல்


கவரும் கண்ணது கண்ணத்தில் கசித்திட,

கலைந்து கடல்கடந்த கணமது கடைந்திட,

தூவளின் நினைவது துயில் துரத்த,

தூயவள் கடமையாய் எனைத் துரத்த,

ஏக்கம் நிறைந்த ஒருதலை என்நிலையானாலும்,

ஒரு கை இரு கையாகி இறுக்கையில் அமர

பொறுத்து வாழும் நாட்களில் வாழ்ந்தும் அமரன் நான் !

#வினித் மணிமாறன்

பொருள்
தூவள் - பெண்

பரணி - பெயர் கவிதை


உன் சிறுசிரிப்பும் ஒரு சிற்றிலக்கியம் !

சிதையா செம்மொழி செவியில் படர்கையில்,

கதையாய் கவிதையாய் வீழும் நாத்தாங்கி நீ !

என் நாளோங்கி, கதிரவன் வீழ,
ஏக்கம் தீர்க்கும் தனியூற்று நீ !

தமிழில் பலபொருள், ஒரு மொழி நீ !

கலகம் நிறைந்த இப்பாருளாகில்,
உன் பெயரின் பொருள் - என் உலகம் நீ !

#வினித் மணிமாறன்

பொருள் : பரணி என்ற சொல் .. தமிழில் ஒரு பல பொருள் ஒரு மொழி அதாவது ஒரே சொல் பல  பொருள்களை கொண்டது
நாதாங்கி - நட்சத்திரம் - பரணி
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
உலகம் என்ற பொருளிலும் வழங்க பெற்றது...

செவ்வாய், 21 நவம்பர், 2017

என் வழித்துணை


நகரும் காட்சிகள் உந்தன் நினைவை நிறைக்க,

உரைக்கும் காற்றில் எந்தன் தேகமயிர் விறைக்க,

உந்தன் எண்ணற்ற கனவை பறிக்க மறுத்தும்,

சிரிக்க மறக்கவில்லை !

நகரும் நொடிகள், உனை பிரிந்து நரக நொடிகளாக ;

இசைக்கும் இசையில் உம் நினைவுளை ஏற்றி,

பயணிக்கிறேன் முடியா பாதையின் முடிவில் தொடங்கி...

#வினித் மணிமாறன்

வியாழன், 9 நவம்பர், 2017

அவளது தூக்கம்

துயிலும் மயிலவள்

கயல் விழி மூடையில்

துயருண்டு வீழ்கிறேன்...

பின்;
வரலா காட்டில்,

வரமென பிறக்கிறேன்

விழியின் இமையது பிரிந்திட...

#வினித் மணிமாறன்

செவ்வாய், 7 நவம்பர், 2017

மழைத்துளி

மேகம் போர்த்திய வானம்
மோகம் பூச... ஆங்காங்கே கொசு கடியாய் மழை துளிகள்

வியாழன், 2 நவம்பர், 2017

காக்கையின் காதல் ஹைக்கூ (மோனை நயம்)


கரையும் காக்கையின் காதலும்,
கார் காலமழையில் கரையாமல் கசிகிறது...
#வினித் மணிமாறன்

கானல் நீரின் காட்சி அவள்

தாகம் தீர்க்கும் தாரிகையே,
கருமேகம் சூழ வந்தவளே,
காணுகின்ற காட்சி தனில்
எந்தன் காணொளியாய் வருபவளே.. 

காரணமே இல்லாமல், என் கானல்நீராய் ஆனதென்ன ?

எழுதாத வரிகள் வந்து,
எழுதிட சுணக்கம் தந்து,
கவிக்கடல் அளக்கயில்,
கண்ணிமைச்ச ஒத்த நொடி

நின் காட்சி இன்றி,
கண்ணிருண்டு செத்தேனடி..

#வினித் மணிமாறன்