சனி, 25 நவம்பர், 2017

பொறியியல்


எட்டில் தெரிகிறது எட்டுத்திக்கின் இயக்கவியல்,

ஆயக்கலையென எழுதப்படும் படைப்பாற்றல்,

வீழ்ந்தெழுந்த பொழுதெல்லாம் தூற்றல்கள்,

வறட்சியிலும் வருத்தமில்லை,

வறண்ட பொழுதும் வருந்தவில்லை !

விளைந்தும் வேலையில்லை ;

விலைத்தரா வேளையில்லை !

காதலும் கடந்ததுண்டு,

என் காதலிக்கும் தெரியாமல் !

குடும்பம் அறியாத விடயங்கள் பலவிருந்தும்,

நடுத்தரம் நாகரீகமென நாடும் நான்காம் வாய்ப்பாடு - பொறியியல் !

#வினித் மணிமாறன்

1 கருத்து: