எட்டில் தெரிகிறது எட்டுத்திக்கின் இயக்கவியல்,
ஆயக்கலையென எழுதப்படும் படைப்பாற்றல்,
வீழ்ந்தெழுந்த பொழுதெல்லாம் தூற்றல்கள்,
வறட்சியிலும் வருத்தமில்லை,
வறண்ட பொழுதும் வருந்தவில்லை !
விளைந்தும் வேலையில்லை ;
விலைத்தரா வேளையில்லை !
காதலும் கடந்ததுண்டு,
என் காதலிக்கும் தெரியாமல் !
குடும்பம் அறியாத விடயங்கள் பலவிருந்தும்,
நடுத்தரம் நாகரீகமென நாடும் நான்காம் வாய்ப்பாடு - பொறியியல் !
#வினித் மணிமாறன்

ஊரே அறிந்த உண்மை
பதிலளிநீக்குஉழைத்தால் உயர்வுண்டு.