வரா கவிதை ,
மசைக்கும் மண்டையில் மண்டியிட ,
கணியா கனவுகளை சுமந்து வண்டியிட ,
கடக்கும் பாதையும் , அவள் நினைவால் கிடைக்கும் போதையும், காதலாய் காதலியாய் ; மனதிற்கு இதம் தர,
கடந்தது இவ்வழி(லி)யும் வழி(லி)யாமல் ...
வரா கவிதை ,
மசைக்கும் மண்டையில் மண்டியிட ,
கணியா கனவுகளை சுமந்து வண்டியிட ,
கடக்கும் பாதையும் , அவள் நினைவால் கிடைக்கும் போதையும், காதலாய் காதலியாய் ; மனதிற்கு இதம் தர,
கடந்தது இவ்வழி(லி)யும் வழி(லி)யாமல் ...
நிலையில்லா வாழ்வில் நிலைத்த உருவெடுத்து,
நினைவுகள் மட்டும் என்கண் உரித்தெடுத்து;
உலவிடும் சிலையென, நித்திரையிலும் நின்னைவிதைக்கும்,
நட்பே !
ககரம் இல்லா உணர்வுகளை பகிர்ந்து ,
உதிரம் பகிராமல் உதிர்த்த உறவாகி ,
சிதறும் தருவாய் தனில் ,
நின்கண் காதல் கணிந்தாலும் ;
மறைத்து கண்ணீருடன் சிரிக்கும் சிரிப்பும் ஒட்டணியே !
சொல் விளக்கம்
ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும்.
விளக்கில்லா இருளில் விளக்கமில்லா கவிதையை தேடி...
இலக்குடன் விளங்கும் விலங்குகள் நடுவில்...
கவித்து தவித்திடும் கவிஞன் நான்..
#வினித் மணிமாறன்