நிலையில்லா வாழ்வில் நிலைத்த உருவெடுத்து,
நினைவுகள் மட்டும் என்கண் உரித்தெடுத்து;
உலவிடும் சிலையென, நித்திரையிலும் நின்னைவிதைக்கும்,
நட்பே !
ககரம் இல்லா உணர்வுகளை பகிர்ந்து ,
உதிரம் பகிராமல் உதிர்த்த உறவாகி ,
சிதறும் தருவாய் தனில் ,
நின்கண் காதல் கணிந்தாலும் ;
மறைத்து கண்ணீருடன் சிரிக்கும் சிரிப்பும் ஒட்டணியே !
சொல் விளக்கம்
ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக