ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஏழ்மையும் அவளும்

கிழிந்த புடவையின் குறுக்கு தையலில்,
ஏழ்மை - காமம் பிதுங்காமல் கணநேரம் கணக்கெடுக்கும்;

அவள் நகங்கள், நகப்பூச்சை
நளிவிழந்தும் நாடவில்லை !

உதட்டு சாயம் உறங்கிடத்தான்,
எத்துனை வெடுப்புகள் வறண்டிருக்கும் !

ஏழ்மையோ; அத்தேக்கங்களில் தேங்காய் எண்ணெய் தேக்கி வைக்கும்;

கண்டதை கொரித்தாலும் பிறர் 
காணாமல் சிரித்தாலும்,
அவள் கண்ணக்குழியதினில்
இருப்பவுனை தேக்கிடலாம் !

இவ்வேழ்மையின் வர்ணனைக்கு அவள் கண்மைதான் கவிப்பொருளே ! 

இவையனைத்தும் நீ கொண்டும்,
உன்னை எழுதி பதிவிடவே,
என்னை ரசிக்காத கண்ணதினில்,
இக்கவிதை படித்துயியற்றி 
என்னையும் கவிஞனாக்கு !

என் எழுத்தேனும் வரம் பெறட்டும்....

#வினித்_மணிமாறன்

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அணுத்துளியவள்


ஓரப்பார்வை முரணிழுக்க,

என்னிளமை எத்தனிக்கும்,

உவமையில்,

அணி இலக்கணம் எங்கேயென !

எடுத்துரைக்க முயல்கையில்,

கயல் கண்ணின் கதிர்வீச்சில்,

நியூட்ரான் நியூசன்ஸ் ஆகும்,

புரோட்டான் புலம்பெயரும் !

என் எலக்ட்ரான் காதல் மட்டும்,

கழிக்குறியில் மொழிபெயர்க்கும்,

இறந்தாலும் இக்காதல்,

பெருஞ்சுவட்டின் அணுத்துளியென்று !

#வினித்_மணிமாறன்

சனி, 18 ஜனவரி, 2020

பொய் மை

உன் மை தூண்டியதும்,
உண்மை பேசிட ஆசை !

இருந்தும் இழைக்கிறேன்,
பொய்யாமொழியதில் மாப்பொய்யினை ;

உன் மூக்குத்தியின் மின்னலோடு,
தொங்கட்டானின் ஒளிக்கவர்ந்து,
வலையளின் உராய்விசையும் இணைகையில்; 

கணத்திடும் இடியோசையும் தோற்திருக்கும்,

உன்வரவை போர்தொடுக்கும் !

உன்பெயர் தெரியாத என்னை பெயர்த்தெடுக்கவோ ?

#வினித்_மணிமாறன்