கிழிந்த புடவையின் குறுக்கு தையலில்,
ஏழ்மை - காமம் பிதுங்காமல் கணநேரம் கணக்கெடுக்கும்;
அவள் நகங்கள், நகப்பூச்சை
நளிவிழந்தும் நாடவில்லை !
உதட்டு சாயம் உறங்கிடத்தான்,
எத்துனை வெடுப்புகள் வறண்டிருக்கும் !
ஏழ்மையோ; அத்தேக்கங்களில் தேங்காய் எண்ணெய் தேக்கி வைக்கும்;
கண்டதை கொரித்தாலும் பிறர்
காணாமல் சிரித்தாலும்,
அவள் கண்ணக்குழியதினில்
இருப்பவுனை தேக்கிடலாம் !
இவ்வேழ்மையின் வர்ணனைக்கு அவள் கண்மைதான் கவிப்பொருளே !
இவையனைத்தும் நீ கொண்டும்,
உன்னை எழுதி பதிவிடவே,
என்னை ரசிக்காத கண்ணதினில்,
இக்கவிதை படித்துயியற்றி
என்னையும் கவிஞனாக்கு !
என் எழுத்தேனும் வரம் பெறட்டும்....
#வினித்_மணிமாறன்