ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018
பாரிஜாதம்
செவ்வாய், 13 பிப்ரவரி, 2018
தனித்த காதலர் தினம்
முன்பெழுதிய கவிதையின் ஆழம் ,
அடுத்த பக்கம் பதிந்தாலும் ,
அதை படிக்காமல்,
எழுதி தேய்ந்த பேனா முனை,
காகிதத்தை கீராமல் தடவி மொழுவ;
வடிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விடியலை தேட !
கிடப்பில் கிடந்த ஆசைகள் யாவும் அசைக்க நினைக்கிறது,
இருந்தும் அசையா விசையாய் திசையெட்டும் தேடுகிறேன் ,
அவள் கடல் கடந்தாலோ;
நான் அவள் கடல் கடந்தேனோ !
என்று கடைந்தும், கடையா பதிலின் கேள்வியாய் நிற்கிறேன்....
இவ்வாண்டும் காதல் அற்ற காதலர் தினத்தில் !
#வினித்_மணிமாறன்
ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018
யார் அவள்
காதல் தேக்கி, அதில் காந்தம் ஏத்தி !
காரிருளிலும் என் போர்வைக்குள் விளக்கேற்றி,
என் கைகோர்க்கும் கோர்வையாய்,
என்னை கைதாக்கும் பார்வையாய் !
என் கை தாக்கும் கடவுச்சொலாய் !
கரு மை பூசிய கருமையாய் !
என் கண் மூட,
செந்திரையில் மிதக்கும் செல் சொல்லும் ;
கவிதை பெட்டகத்தின் அள் அவள் !
அள் ~ பூட்டு
#வினித்_மணிமாறன்
வியாழன், 1 பிப்ரவரி, 2018
பகிரி
பகிரியில் எட்டாம் நிமிடம்,
நான் அழிக்க நினைத்தும்,
எட்டாத குறுந்தகவல் ~ நீ
#வினித்_மணிமாறன்
குளிர்
சாலை நெருக்கத்தில்,
நடுங்கும் குளிரில்,
போக்குவரத்து சமிக்ஞையின் முன் நிற்க,
கனரக வாகனம் தரும் இதச்சூடு ~நீ
#வினித்_மணிமாறன்
