ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பாரிஜாதம்


கதிரவன் கதிர் முற்ற,

கருகா தேகம், வாடினாலும் ;

அவள் அழகு வாடாமல்லி !

காரிருள் வான் கவிழ்க்க,

உலகம் கண்மூடி வீண் கழிக்க,

இதழ் நுனி முத்தமிட்டு,

மொட்டாய் முகம் சுழிக்க,

அவள் அழகை விழி களிக்கும்,

களித்த விழி போர் தொடுக்கும்;

இவன் நெஞ்சை பெயர்த்தெடுக்கும் !

காதல் போதை ஏற ,

பேதை முகமுவமி,

கற்பனையில் இயற்றினாலும்,

பெயர் மட்டும் தெரிந்த,

பாரிஜாதம் என்னவள் தான் !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக