கதிரவன் கதிர் முற்ற,
கருகா தேகம், வாடினாலும் ;
அவள் அழகு வாடாமல்லி !
காரிருள் வான் கவிழ்க்க,
உலகம் கண்மூடி வீண் கழிக்க,
இதழ் நுனி முத்தமிட்டு,
மொட்டாய் முகம் சுழிக்க,
அவள் அழகை விழி களிக்கும்,
களித்த விழி போர் தொடுக்கும்;
இவன் நெஞ்சை பெயர்த்தெடுக்கும் !
காதல் போதை ஏற ,
பேதை முகமுவமி,
கற்பனையில் இயற்றினாலும்,
பெயர் மட்டும் தெரிந்த,
பாரிஜாதம் என்னவள் தான் !
#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக