ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கடந்த காதலி



நிலவொளியில் வினவிய மனம்,
கனவுகளை கலையாமல்,
நடந்ததெல்லாம் களைந்திட;

நகரும் வழியெங்கும் தேடினேன்,
என் காதோரம் வழி மொழிந்து,
என் கனவுகளை விதைத்தவளை !

விதைத்தவள் உறங்கிட,
விதைநிலம் கிறங்கிட,
நகரும் நகரெல்லாம்,
அவள் நிற்கும் கானல்தான் !

என் பேனா மையில்,
குளித்து குதித்த எழுத்துக்கள் சொல்லும்,
என்மைய்யில் உன்மைய்யின் கருமையை !

இம்மையில் எம்மை நினைத்தாயா,
என்பதை நான் அறியேன் ;
கண் சுருக்கி கிருக்கையிலும்,
கூன் விழுந்து நடக்கையிலும்,
உன்னை நான் மறவேன் !

#வினித்_மணிமாறன்