வியாழன், 29 ஜூன், 2017

காதலர் தினம்

அலர் தந்து காதலை சொல்ல துடிக்கும் மனம் ;

என் கைபேசி அலறும் பொழுதெல்லாம் துடித்தது ;

கணதிற்கு கணம் வந்த கவிதைகள் ,
தினத்தை விதைக்க தவறவில்லை ;

வண்ணத்தில் மனதை வெளிப்படுத்த நினைத்தாலும் ,

எண்ணத்தில் துளைந்தது மனம்; என்னவளின் மாற்றத்தால் கலைந்தது  ;

இனம் புரியாத இனிமையான நினைவுகளுடன் ,

காதலும் கடந்தது ,
இன்றைய காதலர் தினமும் கடந்தது !

காதலின் சாரல் இல்லாமலே...

                                          #வினித்_மணிமாறன்

காதல் தோல்வி

நினைக்க மறவா மனம் ,
சுமையாய் சுமக்கிறது பிணைக்க முடியாத காதலை ;

காந்தமாய் ஈர்த்த அமிழ்து ,
இன்று கந்தகமாய் அமிலுது ;

அழைத்த இதயம் அலைய துணியுது  ,
தழைத்த காதல் கரையை கடக்க ;

இனிக்கும் கடந்தகாலம் , இணைக்க எண்ணினாலும் ;

கனியா வருங்காலத்தை,
கருத்தாய் கணித்தால் போலும் ...

                                         #வினித்_மணிமாறன்

ரயில் பயணத்தில் அவள்

புகைக்கும் ஊர்தி , நகைக்கும் குழந்தை ,
இப்படி தொடங்கிய பயணம் !

சன்னலுக்கு அருகே, குளிர் காற்றோடு பேசியப்படி நான் அமர்ந்திருக்க ;

சிணுங்கிடும் அலைபேசியை அணைக்க மறுக்கவில்லை ,

அவ்வப்போது கிறுக்கனாய் அதை கண்டு சிரித்தவாறு ;

மங்கும் ஒளியில் அங்கும் இங்கும் தேடுகிறேன் என் காதல் தேவதையை ...

                                            #வினித்_மணிமாறன்

அவளது நினைவுகள்

தூங்கா இரவுகள்,

உடைந்தும் மூழ்கா தோணியாய், மனம் தத்தளித்திட,

இதுவும் ஓர்வகை காதல் தான் என மனக்கட்டவிழ்த்திட ;

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பச்சோந்தி பாதை ;

மாற்றத்திலும் ,
அவளது நினைவுகள் ஏற்றும் போதை ;

விடியும் காலை விரட்டி அடிக்கிறது ,

காதலின் நினைவுகளை;

காற்றில் சிதறும் சிறு காகிதமாய்....

                                    #வினித்_மணிமாறன்

தந்தையர் தின வாழ்த்துக்கள்

கண்களால் கண்ட பொருளை ,

எண்களால் எண்ண முடியாத அளவுக்கு விளக்கிய தந்தயே...

அறவனைப்பால் என் அன்னையையும் முந்திச்சென்ற விந்தையே...

நான் வீழ்ந்த பொழுதும் , நான் தவறு செய்து என்னை ஊர் சூழ்ந்த பொழுதும்,

என்னை காக்க பின்னால் இருந்தவர் நீர்.....

என் நாள் பல இருந்தும் இன்று உன் நாள்....

இந்நாளைப் போல எந்நாளும், என் நாளை பொண்ணாக்க விரும்புகிறேன்....

குளிரும் இரவு

உறையும் குளிரை உறையாய் போர்த்தி,

வானின் கருமை என் உரையை ஏற்ற ,

நட்சத்திரமும் சோம்பலிட;

நிலவது களவாக..

கலந்திடும் காற்றில் உணர்கிறேன் நகரத்தில் , அகரத்தை...

அன்னையர் தின கவிதை

நிகரில்லா நிறை மதியே ,

என் வாழ்வின் பிறை விதியே !

என் எழுத்தின் காரணியே,

நான் செரிக்கும் பூரணியே !

குறையுடனே வாழ்ந்தாலும்,

குறையுண்டு வாழ்ந்தாலும் ;

நிறைவடையும் நினைவத்திலே,

நுன்னித்தம் நிறைந்தவளே !

வழியில்லா நேரத்திலும்,

என் வலியை பொறுத்தவளே !

வணங்கிட வார்தையின்றி,

சுணக்கத்திலும் சுமந்திடுவேன் !

என்னை சுழிக்காமல் சுமந்தவளை .......

கோயிலில் காதலி


ஆழியென குவிந்திடும் கூட்டம்,

விழியவள் முகம் தேடி கூட்டும்;

கோயிலில் தரிசனம் தேடி நின்ற தருணம்,

மனமோ கரிசனமின்றி நின்னை தேட,

மரத்த இதயம் இயக்க மறுக்க,

கண்டேன் தமிழின் மறு உருவை!

தமிழாய் தமிழச்சி என்னை கடந்திட,

என் வயிறுமுதல் தொண்டை வரை,

ஒரு ராணுவ ஒத்திகை நடந்திட;

நிம்மதியாய் நீர்த்து போனேன்,

நிம் மதியால் நினைவை இழந்து !

#வினித்_மணிமாறன்

அவளது நினைவுகள்

நிலவில்லா வானில், உன் நினைவுகள் உளவிட

உதிர்கிறேன் ஓர் இதழ் இழந்த ரோஜாவாய்...

சுற்றத்தில் மணமிட்டு உதிர்ந்தாலும்,

உன் நினைவை மனம் இட மறுப்பதேனோ..

இசையது மனதினை மசைத்திட ,
கசையும் கனவுகள் கவிதையாய் கசிந்தாலும் ,

தீராத்தாகத்துடன் தீர்க்கம் செய்து, ஆயுளை தீர்த்திட;
திமிரும் திமிழென திகைக்கும் தமிழன் நான்...

சென்னை நோக்கிய பயணம்

ஊர்தி சாலையில் ஊர,

மழை சாரல் தலையைத் துவட்டி தூர;

அகலும் காற்று என் காதில் காதலை கூற,

நகர்கிறேன்;

நகரம் என்னும் நரகத்தை நோக்கி...

நோக்கம் மாறினாலும், சொந்த ஊரின் ஏக்கம்;

ஈரமான கண்ணை தூக்கமுர செய்தாலும்;

காலம் மாறும் வரை மனதை ஏலம் போகாமல் காத்து;

கருகும் கவிஞனாய், மனதால் உருகும் சிறுவன் நான் !

காதல் தோல்வி ஹைக்கூ

ஒரு நடுத்தர குடும்ப ஆணின்  கருச்சிதைவு ... காதல் தோல்வி...

பெண்கள் தின வாழ்த்துக்கள்

உணர்த்திடும் நட்பாய்,
உருகிடும் தாயாய் ,
உறங்கிடும் சேயாய்,
உறைந்திடும் மனைவியாய்,
உறவினர் பெண்ணாய் ,

ஒவ்வொருவரின் வாழ்விலும் தன் வாழ்க்கையை ஒதியமிடும் பெண்களுக்கு , எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ...

பெண்கள் தினம்



சினிங்கிடும் சிரிப்பில் , ஆணின் மனதை சிதைக்கும் கிறுமி பெண் ...

கனிந்த காலத்தின் கலங்கரை விளக்கமாய், தந்தையின் தாடியை தடவிடும் 

சிறுமி பெண் ...

கவிஞனும் கவிதையும், களவியுற செய்யும் எழுத்தாணி பெண் ...

கலையா மனதையும், கலைத்திடும் கலையது களைந்தவள் பெண் ...

சிறுமையோ பெருமையா, ஒருமையின் இலக்கணம் பெண் ...

தோழமை என்றால், என்பால் மறந்து என் வாழ்க்கையை சீரிடும் வெண்பா பெண்...

என் இனிய பெண் தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் ....

#வினித்_மணிமாறன்