ஊர்தி சாலையில் ஊர,
மழை சாரல் தலையைத் துவட்டி தூர;
அகலும் காற்று என் காதில் காதலை கூற,
நகர்கிறேன்;
நகரம் என்னும் நரகத்தை நோக்கி...
நோக்கம் மாறினாலும், சொந்த ஊரின் ஏக்கம்;
ஈரமான கண்ணை தூக்கமுர செய்தாலும்;
காலம் மாறும் வரை மனதை ஏலம் போகாமல் காத்து;
கருகும் கவிஞனாய், மனதால் உருகும் சிறுவன் நான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக