ஆழியென குவிந்திடும் கூட்டம்,
விழியவள் முகம் தேடி கூட்டும்;
கோயிலில் தரிசனம் தேடி நின்ற தருணம்,
மனமோ கரிசனமின்றி நின்னை தேட,
மரத்த இதயம் இயக்க மறுக்க,
கண்டேன் தமிழின் மறு உருவை!
தமிழாய் தமிழச்சி என்னை கடந்திட,
என் வயிறுமுதல் தொண்டை வரை,
ஒரு ராணுவ ஒத்திகை நடந்திட;
நிம்மதியாய் நீர்த்து போனேன்,
நிம் மதியால் நினைவை இழந்து !
#வினித்_மணிமாறன்

நன்றி
பதிலளிநீக்கு