வியாழன், 29 ஜூன், 2017

கோயிலில் காதலி


ஆழியென குவிந்திடும் கூட்டம்,

விழியவள் முகம் தேடி கூட்டும்;

கோயிலில் தரிசனம் தேடி நின்ற தருணம்,

மனமோ கரிசனமின்றி நின்னை தேட,

மரத்த இதயம் இயக்க மறுக்க,

கண்டேன் தமிழின் மறு உருவை!

தமிழாய் தமிழச்சி என்னை கடந்திட,

என் வயிறுமுதல் தொண்டை வரை,

ஒரு ராணுவ ஒத்திகை நடந்திட;

நிம்மதியாய் நீர்த்து போனேன்,

நிம் மதியால் நினைவை இழந்து !

#வினித்_மணிமாறன்

1 கருத்து: