வெள்ளி, 11 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 8




எனக்கென யாரும் இல்லை - என்று பலரும் வாழ்வின் பல நிலைகளில் நினைத்து வருத்தமுற்று, முடங்கி யாரின் செயலையும் கண்டுகொள்ளாமல் தனது வட்டத்தை சுருக்கி கொண்டு, தன்னியல்பு துறந்து அமர்ந்திருக்கலாம். 

அப்படியொரு நிலையில்தான் வேலன் அன்று இருந்தான் . 

இப்படியொரு நிலையில் எப்படிதான் அவனால் தூங்க முடிகிறது என்று பலரும் கேட்கலாம். 

வேலனின் நிலையில், உடலுக்கு தூக்கம் வேண்டும், மனதுக்கு தென்றல் வேண்டும் என்ற இழுப்பரிக்கு நடுவில்; மருத்துவம் வென்றது. 

அவனே தென்றலின் பதிலுக்கு காத்திருக்க நினைத்தாலும், அவன் விழி வறண்டு, இமைகள் கட்டி பிடித்து புணர்ந்தன.  

உடலின் சோர்வை ஆங்கில மருந்து பார்த்துக்கொண்டாலும் , மனம் சோர்வு அவனது மனதை தூங்க விடாமல் பலவாறு வருத்தி அங்கும் இங்கும் ஊசலாட செய்து  கொண்டிருந்தது,

அந்நேரதில் தென்றல் இவனுக்கு அலைபேசியில் அழைத்து , "நான் உன்னை காதலிக்கிறேன் வேலா; ஆனா  நமக்கு இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம், இப்போதைக்கு நல்லா படிப்போம், நல்ல வேலைக்கு போயிட்டு நம்ம வீட்ல பேசலாம், கண்டிப்பா வீட்ல ஒத்துக்குவாங்க. " என்றாள். 

பிறகு வேலன் மகிழ்ச்சியுற்று, வேகமான இதயத்துடிப்புடன், எனக்கு உன்ன இப்போவே பாக்கணும் தென்றல் என்று சொல்லி  உங்க வீட்டு பால்கனிக்கு வந்துடு நான் தூரமா நின்னு உன்ன பாத்துட்டு போயிடுறேன் என்றான். 

அந்த அதிகாலையில், தனது வண்டியை எடுத்துக்கொண்டு தென்றலின் ஊரை சென்றடைகிறான், அங்கு அவளது வீடு இருந்த இடத்தில் வேலனின் வீடு இருந்தது, வேலனின் அப்பா அருகில் இவன் முதல் முறை மொக்கை வாங்கிய டீக்கடைக்காரண் இருந்தான். 

வேலன் வண்டியில் அங்கு வந்ததும், அந்த டீக்கடைக்காரண் " இவன் தான் அய்யா நான் சொன்ன பொறுக்கி பய" என்று கை  நீட்ட. 

வேலன் வேர்வை மழையில் போர்வை நனைத்து எழுந்து அமர்ந்தான். 

(இது போன்ற Teleport கனவுகள் நம்மில் பலருக்கு வந்திருக்கும், ஆனாலும் நான் உங்களின் ஆசைகளை இங்கு இவ்வாறு கொலை செய்திருக்கக்கூடாது மன்னியுங்கள். 

courtesy  : தமிழில் கலசம் சீரியல் - Directed by ரம்யா கிருஷ்ணன்

if you want it in international way : நன்றி கிறிஸ்டோபர் நோலன்)

கருவானத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், அதிகாலை நேரம் 3.30 இருக்கலாம் , அதை confirm செய்ய தன் அலைபேசியாய் on செய்ய mobile screen ஐ double tap  செய்தான் வேலன். 

5 missed calls என்றிருக்க, Lockscreen இல் இருந்த ஏஞ்சலினா ஜொலியை ஓரம் தள்ளி, 8436725 என்று 90s காதலர்களுக்கே உரிய விதத்தில் தென்றலின் பெயரை password ஆக enter செய்து உள்நுழைந்தான். 

தென்றல்தான் அழைத்தது என்று தெரிந்த உடன் மேலும் குதூகலம் அடைந்தான். 

தான் அனுப்பிய குறுந்தகவல்களுக்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என்று பார்த்தான். 

அதில் எந்த பதிலும் இல்லை.. 

"புலனத்தை சென்றடைந்தான், அங்கும் பதில் இல்லை.. 

ஆனால் அங்கும் அவளது அழைப்பு வந்திருந்ததை  பார்த்தான். 

பிறகு அவளது Last seen பார்த்தான் " இரவு 12.38 என்றிருக்க, தூங்காம என்ன பண்ணிருப்பா என்று எண்ணிக்கொண்டு; 

அவளை இந்நேரதில் தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில், கையில் செவிக்கூவியுடன் (headphones) பால்கனியை அடைந்தான். 

அதுவரை இல்லாத குழப்பங்கள் அனைத்தும் அவனை பற்றிகொண்டது. 

இதுபோன்ற மனநிலையில், பாடல்களின் இசை நம்மை அமைதிக்கொள்ள வைக்கும், ஆனால் பாடல் வரிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும். 

பையா திரைப்படத்தில் வரும் "என் காதல் சொல்ல நேரமில்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை என்ற பாடல்" யுவனின் இசையில் அவனை அமைதி கொள்ள செய்தாலும் ; ஆனால் நா.மு விடவில்லை 

" ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி, அந்த நிமிடங்கள் நீளட்டுமே ;

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி, எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே;

யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன், என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்;

சிறு பிள்ளை என, எந்தன் இமைகள் அது , உன்னை கண்டாலே குதிக்கின்றதே .. " என்று வேலனை உருக்கிவிட்டார். 

(நா. முத்து குமாருக்கு நிகரேது  ? சொற்கத்தில் எழுதி தீருங்கள் ஆசானே) 

இந்நேரதில் அழைப்பதா வேண்டாமா என்றிருந்த மனநிலையை இந்த பாடல் வரிகள் ஊக்குவித்து அவனை தென்றலை அழைக்க வைத்தது.

 பற பற பற பறவையொன்று, என்ற வைரமுத்து வரிகள் caller tune ஆக ஒளிக்க.. 

மருந்துகளின் பயனாய் கண் திறக்க முடியாமல், தட்டி தடவி தனது அலைபேசியை எடுத்து

 "Hello யாரு" என்ற தென்றலின் குறல் அவன் காதில் ஒளித்தது.

அந்த கோடையின் காலை குளிரில் வேலன் நடுக்கத்தை உணர்ந்தான். 

முதல் முறை தென்றலிடம் பேச துடித்த பொழுது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையை 100 மடங்கு கூட்டிய ஒரு உணர்வை உணர்ந்து, வாயில் வார்த்தைகளை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, 

கண் இருட்ட தொடங்கி மெல்ல மயக்க நிலையாய் அடைந்தான். 

வேலன் கண் விழித்தானா ? சற்று காத்திருப்போம் !

#வினித் மணிமாறன் 


கருத்துகளுக்கு 
+918220829080

இது போன்ற உங்களது காதல் பகிர்ந்த நிமிடங்களை comment இல்  பதிவிடுங்கள் ! (என்னை தொடர்பும் கொள்ளலாம்) 

திங்கள், 7 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 7




நம்பகத்தன்மை.

ஒரு பெண் நட்பென நினைக்கும் உறவு, காதலாகும் பொழுது அவன் மீது அவள் கொண்ட நம்பகத்தன்மை உடைகிறது... 

ஒரு பெண் உங்களிடத்தில் மனம் விட்டு பேச எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, உங்கள் மீதான நம்பகத்தன்மையை வியாபார படுத்த, பல பரமபத (சைன் வேவ் யோசனைகள்) யோசனைகளை சிந்தித்து, அதை அவள் மனதில் netflix series போல மீண்டும் மீண்டும் ஓட்டி Binge Watching செய்திருக்கலாம்.

ஆனால் அவள் Binge வாட்சிங் பொழுதில், முடிவற்ற அந்த தொடரை மீண்டும் மீண்டும் ஓட்டினாலும், அதன் வேகம், Dairy Milk Silk ஒன்றை kiss me bgm உடன் உண்ணும் வேகத்தில் உணர்ந்து நம்பகத்தன்மை பெறுகிறாள். 

(இது காதல் வயப்பட்ட பெண்களுக்கு மட்டும் புரியலாம் - புரியவில்லை என்றால் கவலை வேண்டாம் - உங்களவனது Series விரைவில் Release செய்யப்படும்)

தென்றல் உறங்கட்டும் என்று நாம் ஒதுங்கிய நேரத்தில், தென்றல் தூங்கி இருந்தால்; அதில் என்ன பிரமாதம் இருக்க போகிறது !

Universal truth நிகழ்ந்தது, நான் இங்கே தூக்கம் கெட்டு கெடக்கன், உனக்கென்னடி தூக்கம் என்பார்ப்போல; அடுத்த நொடி மேகலை நோக்கி பறந்தது அழைப்பு. 

இந்த பாடலை காப்பி செய்ய ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும். கட்டனங்களுக்கு உட்பட்டது...

ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று நா.முவின் வரிகள், அதை கேட்க தொடங்கிய அடுத்த வினாடி; தென்றல் அழைப்பை மேகலை ஏற்று "சொல்லுடி, எப்படி இருக்கே இப்போ" என்றாள் மேகலை.

"நல்லா இருக்கேன் டி "

Tablets போட்டாச்சு தூங்கி எழுந்தா okey ஆயுடுவேன்.

உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..  உனக்கு ஒரு Screenshot அனுப்புறேன் அதை பாரு சொல்றேன் என்று தென்றல் முடிப்பதற்குள், யாரு வேலனா என்றால் மேகலை...

தென்றல் நினைத்தும் பார்க்கவில்லை, மேகலை இப்படி ஒரு கற்பூரமாய் இருப்பாள் என்று.

(இந்த இடத்தில் ஒரு வேண்டுகோள்; ஒருவர் எந்த நம்பிக்கையோடு வேண்டுமானாலும் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்திருக்கலாம், நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள நம்பிக்கையை சம்பாரிக்கவோ, அல்லது அவர்களின் ஆறுதல் வார்த்தைகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்று ஒப்புதலுடன் வாங்கவேண்டும் என்ற நோக்கதிலோ; தயவு செய்து அந்த செய்தியை screenshot எடுத்து  அனுப்பாதீர்கள். அவ்வாறு நீங்கள் அனுப்பும் நேரத்தில்  உங்களை போலவே வேர் ஒருவனும் அவர்களின் நம்பிக்கையை சம்பாரிக்க நீங்கள் அவரை பற்றி என்ன பேசினீர்கள் என்ற screenshot பறக்கவிடலாம்.)

#நினைவில் கொள்ளுங்கள் இவ்வுலகம் மிக சிறியது
#screenshot is injurious to friendship 
#screenshot kills privacy

அந்த பகீர் படபடப்பு தென்றலை சற்று திக்குமுக்காட செய்திருந்தது,
ஒரு நிமிஷம் இருடி என்று மேகளையிடம் கூறிவிட்டு, உடனடியாக அலைபேசியுடன் மொட்டைமாடியை  அடைந்தாள். 

Water tank  இருந்த மூலையை அடைந்தாள், அந்த குளிர்ந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, வானத்தை பார்த்தாள்; ஒளிர்ந்த வெண்ணிலவை வெள்ளை மேகம் மறைக்க, நிலவு தனது வெண்மை இழந்து ஒளிமங்கி காட்சியளித்தது.  (தென்றலை வேலன் மங்க  வைத்தது போல)

ஆனாலும் கருவானம் விடவில்லை, தனது கருமையால் நிலவை வெண்மையாக காட்ட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. (மேகலையை போல)

இரண்டு மாடி ஏறியதன்  பயனால், 200 மீட்டர் ஓட்டம் ஓடிய பெண்ணாக தனது  சூடான மூச்சிகாற்றை, குளிர்ந்த காற்றில் பாய்ச்சி ; சொல்லுடி இப்போ என்றாள் . 

மேகலையை இப்பொழுது பதற்றம் பற்றி கொண்டது, ஆனாலும் தோழிகளுக்கே உரிய பாவனையில், என்னடி வேலன்னு சொன்ன உடனே இப்டி மூச்சு வாங்குது என்று ஒரு கீச் சிரிப்பை சிதற செய்தாள். 

எருமை  அதெல்லாம்  ஒன்னும்  இல்ல, வீட்ல யாராச்சும் என்ன பேசுறேன்னு கேட்டுட்டா என்ன பண்றது அதான் மொட்டை மாடிக்கு வந்தேன் என்றாள் தென்றல் . 

பாருடா ; புள்ளைக்கு பயத்தை - மறுபடி மறுபடி வம்பிழத்தாள் மேகலை. 

அதெல்லாம் இருக்கட்டும் வேலணை பற்றி நீ என்ன நினைக்குற என்றாள் தென்றல் . 

"அட நாயே, நான் கேக்க வேண்டியத எல்லாம் நீ கேக்குற ?" என்றாள் மேகலை. 

"Eeee.. என்று சிரித்தவாறு, அவன் கூட பேசாம இருந்தப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சுன்னு உனக்கே நல்லா தெரியும்"

அவன் சாதாரண பசங்க மாதிரி இல்லடி, அவன் ஏதோ ஒரு விதத்துல சாதாரண பசங்க கிட்ட இருந்து  வித்யாசமா இருக்கான் டி. 

அவன் அப்டி இப்டின்னு, விஜய் tv ல கும்கி  படத்துக்கு கோபி நாயர் பேசுற வரையறை மாதிரி ஓடியது. 

இதையெல்லாம் சளிபில்லாமல் கேட்ட மேகலை, தென்றலை நோக்கி ஒரே ஒரு கேள்வியை கேட்டாள். 

இப்போ வேலன் கிட்ட என்ன சொல்ல போற ?

அவன் கிட்ட நீ அவன  காதலிக்கிறேன்னா ?

Final year வந்தாச்சு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 90 நாள் நாமெல்லாம் இப்டி bus  ல ஒன்னா போகலாம். அதுக்கு அப்புறம் ?

நீ அனுப்புன, screenshot  பார்த்தேன்; அவனே எல்லாதுக்கும் முற்று புள்ளி வைக்கிறான். நீ தேவை  இல்லாமல் அரைபுள்ளி போட்டு எல்லாதாயும் தொடங்கி வைக்காத. 

இதையெல்லாம் உங்க வீட்ல எப்டியும் ஒத்துக்க  மாட்டாங்க, அப்புறம் எதுக்கு தென்றல் இப்டி complicate  பண்ணிக்கிற உன்னோட life ah என்றாள் மேகலை . 

ஏண்டா இவளுக்கு இந்த screenshot  அனுப்பினோம் என்று தென்றலுக்கு தோன்றியது. 

ஆனாலும் மணிமேகலையின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவள் இழந்திருந்தாள். 

(காதல் வயபட்ட பலருக்கு இதுதான் பிரட்சனை ; உங்கள் எண்ணங்களுக்கு தோழமை தலையசைக்க வேண்டும் என்றே அவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்கள் கூற வரும் உண்மையான கருத்துகளுக்கு உங்கள் முக்கியத்துவம் செவிசாய்ப்பதில்லை - உங்களுக்கு ஆமா சாமி போடும் தோழமை தான் அப்பொழுது தேவை படுகிறார்கள் - இங்குதான் காதலுக்கு கண் குருடோடு, செவியும் பழுதாகிறது) 

இதுவரை வராத தலைவலி தென்றலுக்கு வந்ததாக மேகலையிடம் கூறினாள். 

இங்குதான் மேகலை திறம்பட ஒரு விஷயத்தை கூறினாள், " இங்க பாரு புள்ள,  உனக்கு வேலன் தான் வேணும்னா உனக்கு முழுசா உதவி செய்ய நான் தயார். ஆனா எனக்கு உன்னையும் , உன் குடும்பத்தையும் ரொம்ப நல்லா தெரியும். 

நான் இதுவரைக்கும் எது சொல்லி இருந்தாலும் உன்னோட நல்லத்துக்காக மட்டும் தான் சொன்னேன். 

இதயெல்லாம்  மனசுல போட்டு குழப்பிக்காம, இப்போ நல்லா தூங்கு. 

எடுத்தோம் கவுத்தோம்னு இதெல்லாம் முடிவு செய்ய கூடாது. 

நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு. 

எனக்கு தெரிஞ்ச தென்றல், ரொம்ப தைரியமான, எதார்த்தமான ஒருத்தி. 
சொல்லப்போனா என்ன மாதிரி கிராமத்து புள்ளைங்களுக்கு உத்வேகமே தென்றல் மாதிரி ஆளுங்க தான்."

அப்டின்னு  சொல்லிட்டு, நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா என்னய்ய மன்னிச்சுக்க புள்ள என்றாள் மேகலை. 

தென்றலுக்கு மணிமேகலையின் மீதிருந்த நம்பிக்கை மேலும் உயர்ந்தது, எந்த screenshot um பகிறாமல். 

(மன்னிப்பு என்ற வார்த்தைக்கு, அவ்வளவு மதிப்பு உண்டு.. என்னதான்  friends குள்ள  sorry  thanks லாம் வேணாம்னு சொன்னாலும் , உங்ககிட்ட மன்னிப்பு கேக்கும்  நண்பர்களை இழக்காதீர்கள் - இது போன்ற ஒரு நண்பனை இழப்பது, ஆயிரம் க்ரோத நட்புகளை சம்பாரிப்பதற்கு சமம்.) 

நீ எதயுமே தப்பா சொல்லல மணி, இப்டி ஒரு தெளிவு பிறக்கும்னு தான் இந்த நேரத்துலயும், உனக்கு போன்  பண்ணினேன் என்றாள் தென்றல். 

நான் இப்போ நிம்மதியா தூங்க போறேன், நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் அத  தப்பா நினைக்க மாட்டேன் மணி என்று கூறி  அழைப்பை துண்டித்து, வானத்தை பார்த்தாள்.. 

மேகம் கலைந்து, நிலவு பிரகாசித்தது. 

ஆனால் வானத்தின் கருமை மட்டும் ; நிலவின் வெண்மையை எடுதுயம்பி கொண்டுதான் இருந்தது.   

(மேகலையையும் சற்று விரும்புங்கள்.. இந்த நேரத்தில், உங்கள் பள்ளி பருவ மேகலையை தொடர்பு கொள்ளலாம். அவர்களிடம் இந்த பதிவு அவர்களை நினைவு கொள்ள செய்தது என்று பகிறலாம்)

#வினித் மணிமாறன் 

கருத்துகளுக்கு 
+918220829080

புதன், 2 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 6




விபத்துகள் நேரும் பொழுது, நமக்கு என்ன நேர்ந்தது என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், தங்களை சார்ந்தவர்க்கு என்ன ஆயிற்று என்று நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, உங்களுக்கு அவர்களின் மீதுள்ள அலாதியான அன்பு தெரிகிறது.

வேலனுக்கு இவ்வாறு நடப்பது முதல்முறையன்று, அவனது பதினான்காம் அகவையில், தந்தையுடன் தீபாவளிக்கு துணி எடுக்க சென்று வீடு திரும்பும் வழியில் பேருந்து விபத்துக்குள்ளாகி, தலைகீழாக கவிழ, இருளில், அப்பேருந்திலிருந்து வெளி வந்து, அவன் தனது தந்தையை தேட, அவர் இவனை தேட ; அந்த கோர சம்பவம் இவர்களை நாட்கணக்கில் வருத்தியது.

அந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் பல வருடங்கள் அவனுக்கு தலைவலி இருந்ததும் உண்டு.

அதே போல ஒரு சூழலைதான் வேலன் இப்பொழுதும் கடந்திருந்தான்.

அதே தலைவலி இவனை அன்று பற்றிக்கொண்டது, ஆனாலும் வீட்டை அடைந்த உடன் தனது கைபேசியை தேடி அவளிடம் பிறந்தநாள் வாழ்த்து கூற முற்பட்டான்.

பதிலளிக்காத காரணத்தால் குறுந்தகவலில் வாழ்த்துகளை பின்வருமாறு ஏவினான்.

"வாழ்வில், எனது அன்னைக்கு பிறகு நான் மதிக்கும் பெண்ணாய், என் வாழ்வில் வந்தவளே. இதுவரை பெறாத இன்பமனைத்தும் இவ்வகவையிலே பெற்று வாழ வாழ்த்துகள்."

அடுத்த 5 நிமிடத்தில்... அடுத்த ஏவுகணை

"என்னால் இயன்ற மட்டும் உனது முகத்தில் புன்னகை விதைக்க முயன்றேன்,முயல்கிறேன், முயல்வேன்..

மணிக்கணக்கான பேச்சு, இதைதான் பேச வேண்டும் இதை பேச கூடாது என்றெல்லாம் நமக்குள் எந்த வரைமுறையும் இல்லாத பொறுப்பு திறப்பை, நான் காதலென்றெண்ணி உன்னிடம் அதை பகிர்ந்தேன்."

"உனது விருப்பம் என்ன என்பதை, என் காதலை பகிர்ந்தவுடன் உன் கண்ணில் கண்டேன், இனி அப்படி ஒரு வார்த்தையை சொல்லி, நமது நட்பை கொச்சை படுத்த விரும்பவில்லை.

மூன்றாம் ஏவுகணை !

என்னால் முடிந்த ஒரே பிறந்தநாள் பரிசு, உன்னிடம் காதல் என்ற சொல்லை பயன்படுத்தி வற்புறுத்தாமல் இருப்பதே"

"Happy Birthday Ilanthenral Srinivasan"

"அதே குழிந்த சிரிப்போடு என்னிடம் பேசும் தென்றல், மீள்வாள் என்ற நம்பிக்கையுடன் உனது நண்பன் வேலன்" 

இவ்வாறாக பல குறுந்தகவல் ஏவுகணைகளை தட்டி, தான் உட்கொண்ட வலிமரக்கும் மாத்திரைகளின் மாயத்தில், விழி மூடினான்.

மூடி மூன்றாம் நொடி, தனது கைபேசி சிணுங்குவதை உணர்ந்தான்.

ஆனால் அதை கையிலெடுத்து, யாரென்று பார்க்காமல் On செய்து காதில் வைத்தான்.

(உங்களது ஆர்வம் புரிகிறது... சற்று பொறுமை கொள்ளுங்கள்)

மற்றொரு முனையில், பாலாஜி - மச்சான் எப்படி இருக்க, தலைல ரொம்ப இரத்தம் வந்துச்சே டாக்டர் என்ன சொன்னாங்க ?

நாளைக்கு காலேஜ் வந்துடுவியா என்றான், இவனோ, என்னால முடியல மச்சான். 
Tablets போட்டுட்டேன், தூங்க போறேன் அப்புறம் பேசவா என்றான்.

Sorry மச்சான், நீ தூங்கு நாளைக்கு பேசலாம் என்றான் பாலாஜி.

கையோடு alert slide பட்டனை தள்ள, கைபேசி Silent mode சென்றடைந்தது.

நிம்மதியான உறக்க நிலையை அடைந்தான் வேலன்.

இவன் இருளடைய, தென்றல் விடியல் கொண்டாள் போலும்.

இவனது குறுந்தகவல்களை பார்த்து, இவனை தொடர்பு கொள்ள முயன்றாள்.

அவனிடம் இருந்து பதில் இல்லை.
பிறகு புலனத்திலும் முயன்றாள்..

Ringing என்றே வந்தும், பதில் ஏதும் இல்லை.

நான்கு முயற்சிக்கு பின், முயல்வதை நிறுத்தி.. அவன் அனுப்பிய குறுந்தகவல்களை மீண்டும் படித்து, உறக்கம் கொண்டாள்.

(யாரிடமேனும் ஏதேனும் சொல்ல முயன்று, அதை அவர்களிடத்தில் சொல்ல சந்தர்ப்பம் அமையாமல் போகும் தருவாயில், மீண்டும் அவர்களை பார்க்கும் பொழுது ; நீங்கள் சொல்ல விரும்பிய வார்த்தைகளின் வீரியம் குறையதான் செய்கிறது.

உங்களது ஒருதலை காதலனிடம்/ காதலியிடம் அல்லது crush இடம், சொல்ல முயன்று பல முறை தட்டச்சில் type செய்து, delete செய்யப்பட்ட பல கவிதைகளை போல.)

சற்று அமைதி கொள்ளுங்கள்..

தென்றல் வேலன் உறங்கட்டும்.