வியாழன், 29 ஜூன், 2017

காதலர் தினம்

அலர் தந்து காதலை சொல்ல துடிக்கும் மனம் ;

என் கைபேசி அலறும் பொழுதெல்லாம் துடித்தது ;

கணதிற்கு கணம் வந்த கவிதைகள் ,
தினத்தை விதைக்க தவறவில்லை ;

வண்ணத்தில் மனதை வெளிப்படுத்த நினைத்தாலும் ,

எண்ணத்தில் துளைந்தது மனம்; என்னவளின் மாற்றத்தால் கலைந்தது  ;

இனம் புரியாத இனிமையான நினைவுகளுடன் ,

காதலும் கடந்தது ,
இன்றைய காதலர் தினமும் கடந்தது !

காதலின் சாரல் இல்லாமலே...

                                          #வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக