பாலை வெயிலின் மணல்துகளாய் மனம்,
உராய்ந்து தேய;
காணும் இடமெல்லாம் அவளது காட்சி - பிழை !
மதிக் கிளரும் நிலவின் முதிர்ச்சி ,
பதியும் கிரணத்தால் பிதற்றாமல் வருடி,
சென்ற வழியெல்லாம் நிலவும் செப்பளிட !
இதயம் உரைக்கும் பெயரை விழி தேடுகிறது,
குடுவையை ஏகக்கவிழ்த்தும் அகதியான கடைத்துளி நீராய்,
காலனி தேயும் வரை காத்திருந்து,
காலனி தேயும் வரை காத்திருந்து,
அடிவழியேறும் கல்லும் குத்தி காட்ட,
கசக்கிய பணயசீட்டு இப்பொழுது பயணற்ற பயணசீட்டாகிறது !
சிக்கி சிதறும் மனம் அவள் வருகைவரை காத்து,
சிதைவு தவிர்க்க பதமியுண்கிறது !
#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக