மாலை வெயிலின் சாயம் ஏற்று,
நிலவவள் சினுங்க; சிவப்பு கம்பளம் சாற்றி,
நிலவு குடி பெயர,
அவளது போர்வையாய், புடவையாய்,
அழகிற்கழுகு சேர்த்து,
கவிக்கு எட்டாமல் நிலவு மறைகையில்,
மோகமும் கவித்தாகம் தீர்க்கும் !
புவிக்காதல் சோடிகள் நிலவை செரித்து,
களவை கொரிக்கக் காரணி நிலவானால்,
கவி எழுதும் காகிதம் இவனென்பேன்,
பிறர் இறுக்கம் தீர்க்க இவன் தன்சதை பிழிந்தாலும்,
ஒற்றை ஆணாய் எண்திசையும் காதலை தேடும் காதலன் ~ கார்மேகம்
#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக