செவ்வாய், 6 மார்ச், 2018

கார்மேகம்


மாலை வெயிலின் சாயம் ஏற்று,

நிலவவள் சினுங்க; சிவப்பு கம்பளம் சாற்றி,

நிலவு குடி பெயர,

அவளது போர்வையாய், புடவையாய்,

அழகிற்கழுகு சேர்த்து,

கவிக்கு எட்டாமல் நிலவு மறைகையில்,

மோகமும் கவித்தாகம் தீர்க்கும் !

புவிக்காதல் சோடிகள் நிலவை செரித்து,

களவை கொரிக்கக் காரணி நிலவானால்,

கவி எழுதும் காகிதம் இவனென்பேன்,

பிறர் இறுக்கம் தீர்க்க இவன் தன்சதை பிழிந்தாலும்,

ஒற்றை ஆணாய் எண்திசையும் காதலை தேடும் காதலன் ~ கார்மேகம்

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக