அவள் இருப்பிடம் தேடும் கண்கள்,
அவள் நாற்காலியில் உறங்கிட,
நிமிரா மங்கையை நிமித்தமும் தேடினேன்,
திருட்டும் கற்றேன் அவள் அலைபேசி அடைந்திட,
தேடிக்கண்டேன் தேன்தமிழின் பிரியாளை,
பாரதியின் சிறையாளை,
முண்டாசின் வரியவள் முகவரி,
வெண்காசின் நிறம் அவள் முக ஒளி,
உவமம் பிதற்ற; பிறை திரை சேர,
விடைபெறும் நாளின், விடியலில் உணர்ந்தேன்,
விதியவள் தன்பாதியை பகிர்ந்தவள் என்று !
இருந்தும் மகிழ்ந்தேன்,
மலையேறிய காதல் அவள் செவியேறிய படியால் !
#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக