செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

தனித்த காதலர் தினம்

முன்பெழுதிய கவிதையின் ஆழம் ,

அடுத்த பக்கம் பதிந்தாலும் ,

அதை படிக்காமல்,

எழுதி தேய்ந்த பேனா முனை,

காகிதத்தை கீராமல் தடவி மொழுவ;

வடிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விடியலை தேட !

கிடப்பில் கிடந்த ஆசைகள் யாவும் அசைக்க நினைக்கிறது,

இருந்தும் அசையா விசையாய் திசையெட்டும் தேடுகிறேன் ,

அவள் கடல் கடந்தாலோ;

நான் அவள் கடல் கடந்தேனோ !

என்று கடைந்தும், கடையா பதிலின் கேள்வியாய் நிற்கிறேன்....

இவ்வாண்டும் காதல் அற்ற காதலர் தினத்தில் !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக