ஞாயிறு, 26 நவம்பர், 2017

பாரதி ~ மாத்தமிழ் கவி


பிறப்பு எனும் சிறப்பினை எய்தி,

பொறுப்பு எனும் வெறுப்பினைத் தாங்கி,

சிரிப்பு எனும் செழுமையை மறந்து,

தமிழனாக தமிழை இறைந்து,

இறப்பு எனும் முழுமையை அடைந்தான்; பாரதி !

பிடி மிதித்து தமிழ் இறந்தது அன்று ! ஆனால்,

படிக்கும் தமிழே மறந்தது இன்று ! 

இயலிசையில் சிறந்த எம்தமிழ்,

என்றும் உங்கள் அயல் அசையில் அடங்காது ! 

இன்று தூங்கும் செந்தமிழ் மொழி !

ஒருநாள் ஓங்கும்,

அன்று.....

இச்செந்தமிழனின் கை அதைத் தாங்கும் ! 

- வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக