பிறப்பு எனும் சிறப்பினை எய்தி,
பொறுப்பு எனும் வெறுப்பினைத் தாங்கி,
சிரிப்பு எனும் செழுமையை மறந்து,
தமிழனாக தமிழை இறைந்து,
இறப்பு எனும் முழுமையை அடைந்தான்; பாரதி !
பிடி மிதித்து தமிழ் இறந்தது அன்று ! ஆனால்,
படிக்கும் தமிழே மறந்தது இன்று !
இயலிசையில் சிறந்த எம்தமிழ்,
என்றும் உங்கள் அயல் அசையில் அடங்காது !
இன்று தூங்கும் செந்தமிழ் மொழி !
ஒருநாள் ஓங்கும்,
அன்று.....
இச்செந்தமிழனின் கை அதைத் தாங்கும் !
- வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக