மலைமுகட்டில் அவன் மடியில்
மடிந்த கணம்,
வீழ்க்கதிரின் வீரியம் விழித்திரைக்கு விக்கல் தர,
விரியும் கருவிழியில் கதிரவனும்,
கார்முகில் தான் !
இமையது இமையுற இதயதிர்வு இன்மையாகும் !
பன்மை இருந்தும் இவ்வொருத்தியின் ஒருமை தேடும்,
கதகதப்பிற்குக் கோர்தாலும் ,
கதைகதைக்கக் கோர்த்தாலும் ,
கை ரேகை கரைந்தினையும்,
கவியனவனின் கண் காட்சியில்!
#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக