புதன், 29 நவம்பர், 2017

அவனது விழி


மலைமுகட்டில் அவன் மடியில்

மடிந்த கணம்,

வீழ்க்கதிரின் வீரியம் விழித்திரைக்கு விக்கல் தர,

விரியும் கருவிழியில் கதிரவனும்,

கார்முகில் தான் !

இமையது இமையுற இதயதிர்வு இன்மையாகும் !

பன்மை இருந்தும் இவ்வொருத்தியின் ஒருமை தேடும்,

கதகதப்பிற்குக் கோர்தாலும் ,

கதைகதைக்கக் கோர்த்தாலும் ,

கை ரேகை கரைந்தினையும்,

கவியனவனின் கண் காட்சியில்!

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக