ஞாயிறு, 3 டிசம்பர், 2017

அவளை கண்ட நொடி


ததும்பும் பார்வையில் தழுவும் மனம்,

தும்பிருந்தும் பற்றா கன்றென,

கம்பனவன் கண்ட கணையாழிக் காதல்!

கண்டவுடன் கரைகடக்கும், கடிந்தவள் பார்க்கையில்!

அவள் கூந்தல் ஏந்தும் மலர் வீழ்ந்ததும் வாடியது,

உதிர்ந்த மயிரின் உயிர், கணத்தில் மறைந்தது!

சிறைந்த மனம், சிக்கி சிதையுமொலி;

கேட்டும் கடிவாளம் கழழா இதயமொழி ~ அவள்

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக