ததும்பும் பார்வையில் தழுவும் மனம்,
தும்பிருந்தும் பற்றா கன்றென,
கம்பனவன் கண்ட கணையாழிக் காதல்!
கண்டவுடன் கரைகடக்கும், கடிந்தவள் பார்க்கையில்!
அவள் கூந்தல் ஏந்தும் மலர் வீழ்ந்ததும் வாடியது,
உதிர்ந்த மயிரின் உயிர், கணத்தில் மறைந்தது!
சிறைந்த மனம், சிக்கி சிதையுமொலி;
கேட்டும் கடிவாளம் கழழா இதயமொழி ~ அவள்
#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக