சனி, 9 டிசம்பர், 2017

80ஆம் பிறந்தநாள் வாழ்த்துரை

வீரம்மா பெற்றெடுத்தாள்,

வீரமாய் பெற்றெடுத்தாள்!

தகப்பனின் தனிச்சொத்து,

செல்வமாய் பெற்றெடுத்து,

செல்லமாய் இவர் வளர,

செந்தில்நாதனும் பூரித்திருப்பான் !

பழநியின் வேல் கண்டு !

செறுப்பற்ற நடை , செருகற்ற குணம்,

இவ்விரண்டும் இவர் இயல்பு !

தந்தை தாயறிய,

வேலனுக்கு வள்ளி வந்தாள்,

இருவரை கவனிக்க;

இருமூன்றை பெற்றெடுத்தாள்,

இரும்பின் இயற்பியல் !

பெயரன் பெயர்திக்கு,

சோறூட்ட பிசைகையில்,

அண்ணமும் தேன் ஏறும்,

அனுதினமும் நாவூரும்,

அதட்டி தொடை கில்லையிலும்,

தட்டி பொறை நீக்கயிலும்,

இவள் பித்தம்,

வேண்டும் நித்தம் !

புகையாடுப்பு மூட்டையிலும்,

புகையிலையை உருட்டையிலும்,

கூன் கிழமும் கோகிலம் தான் !

பத்தை தீட்டினாலும்,

நான் பத்திரைக்க திட்டினாலும்;

அன்னமொத்த குணவதி,

திண்ணம் அதை நினைவரியும் !

எம்புட்டு வளர்ந்தாலும்,

என் வாயூட்ட நீர் வேண்டும்,

நீர் கடந்த எண்பத்து பத்தாது ,

என் பிள்ளை பத்து வரை,

பாத்திருந்து கொல் அடைக !

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக