வீரம்மா பெற்றெடுத்தாள்,
வீரமாய் பெற்றெடுத்தாள்!
தகப்பனின் தனிச்சொத்து,
செல்வமாய் பெற்றெடுத்து,
செல்லமாய் இவர் வளர,
செந்தில்நாதனும் பூரித்திருப்பான் !
பழநியின் வேல் கண்டு !
செறுப்பற்ற நடை , செருகற்ற குணம்,
இவ்விரண்டும் இவர் இயல்பு !
தந்தை தாயறிய,
வேலனுக்கு வள்ளி வந்தாள்,
இருவரை கவனிக்க;
இருமூன்றை பெற்றெடுத்தாள்,
இரும்பின் இயற்பியல் !
பெயரன் பெயர்திக்கு,
சோறூட்ட பிசைகையில்,
அண்ணமும் தேன் ஏறும்,
அனுதினமும் நாவூரும்,
அதட்டி தொடை கில்லையிலும்,
தட்டி பொறை நீக்கயிலும்,
இவள் பித்தம்,
வேண்டும் நித்தம் !
புகையாடுப்பு மூட்டையிலும்,
புகையிலையை உருட்டையிலும்,
கூன் கிழமும் கோகிலம் தான் !
பத்தை தீட்டினாலும்,
நான் பத்திரைக்க திட்டினாலும்;
அன்னமொத்த குணவதி,
திண்ணம் அதை நினைவரியும் !
எம்புட்டு வளர்ந்தாலும்,
என் வாயூட்ட நீர் வேண்டும்,
நீர் கடந்த எண்பத்து பத்தாது ,
என் பிள்ளை பத்து வரை,
பாத்திருந்து கொல் அடைக !
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக