நகரம் அவள் அழகை ரசிக்க மறுத்தும்,
நகரத்து நிலவு நகர மறுக்கிறது,
கண்ணருகே பலரும்,
கைபேசியில் காதலாடி கவிழ்ந்து பேச,
கைபேசி கண்ணயர்ந்தும் அவளை கவிழ்க்க முயன்றவன்,
மகிழுந்தின் மழைச்சாரல் மறைக்கும் கண்ணாடியை மடியமர்த்தி,
நித்திரை கொள்கிறான்,
சுற்றம் காதலில் கரைத்தேட,
கடந்த காதல் கடையக் கடிகிறது,
காலங்கண்ட கவிநிலவின் கதிரீர்ப்பாய்,
கரையொதுங்கும் குறையுடை நுரைக்குமிழி நான் ....
#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக