தைத்த நூல் தளர்ந்து காற்றை கதர் கடக்க செய்ய,
தலை கோதிய பொதிகையவள் புது காட்சி நித்தம்தர,
காற்றின் குளிர்ச்சியில் நினைவது சுத்தம் பெற,
உரைக்காற்றின் உருக்கம் உருகாமல் இறுக்கி வைக்க,
சூத்திரம் மறந்தது , என்னவள் காட்டும் புவியின் திறம் காண;
வரவேற்ற கொதிக் காப்பி நாவில் வார கணக்காக மரவுதந்த நினைவு; மறவுர
புகைவண்டிக்கே புகை ஏற்றும் புனிதப் பயணியின் நடுவில்,
அவ்வூர் இவ்வூர் என பெரும் கூச்சலுக்கிடையில்
ஊறும் உறக்கமற்ற உறைப்பொருள் நான்...
#வினித் மணிமாறன்

Super nanbaa
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்கு