அவள் நினைவில்
நிழலிலமர்ந்த வேளை
சோடிகள் கூடக்கான
கோடி காதல் கண்டும்
ஆழி ஆவென்றிறைந்தது...
வீழும் சூரியொளி
ஆழிக்கரையோரம் பதிந்த
சுவடுகளில் நிழல் நிரப்புகிறது ...
அசைக்கும் குளிர்நீர் பாதங்களை
நனைத்தும் நுரைத்தும் அசையா
துளிமண்ணாய் மன்னவன்...
திடீரென உயிர் பெற்ற சவமாய்
திடுக்கிட்டு திரும்புகிறான்...
மன்னவள் பெயருடைய சிறுமியை
யாரோ ஒரு தாய் உவரும் காற்றில்
உராயாமல் கரைக்க....
#வினித்_மணிமாறன்

hmmmmm..chance-less words
பதிலளிநீக்கு