வெள்ளி, 8 நவம்பர், 2019

துயிற்துணைவி


திகட்ட திகட்ட உம்மை கிறுக்கி,

அதில் நம்மை மட்டும் பொறுக்கி,

தீர்த்த வார்த்தைகளனைத்தும் கோர்த்து ;

என் ஆசைகள் தீர்த்து பார்த்திட,

மஞ்சள் கயிரொன்றா வேண்டும் ?

சேராது நாம் கடந்த வாழ்வின்,

கனவும் சோர்ந்து போனபின் கூட, 

உன்னை சார்ந்து வாழாத நொடிகள்,

கடந்த காலாமானாலும்,

உன் நினைவற்று கிடந்த காலம்,

 ஆகாது கண்மணியே !

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக