வெள்ளி, 26 அக்டோபர், 2018

இதய துடிப்பு


நாடி வழியோடும் உதிரம் பிரிக்கும் மின்சாரமாய்,
நின் சாரம் என் குருதியோடையில் போதை ஏற்றிட ;
ஏறும் போதை சீரும் செறுக்கில்,
நரம்பின் வரம்புகள் கடந்து கிழித்திட,
கிழியல் அடைக்கும் தட்டனுவில்,
உரிமை கோர உன் பெயர் கிறுக்கினேன் !

நின்பெயர் பதித்த தட்டனு தகர்ந்து,
தகர்வின் நகர்வில் இதயம் அடைந்திட,
துடிக்கும் துடிப்பிலும் துயிலாமல் துயர்ந்தேன்,
உன் நெஞ்சக குழியின் புதையலாய் !


#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக