அந்தி வானடக்க, வாடையின் வலுகிறுக்கும்,
வரியற்ற வெண்பாக்கள் பெண்பாலின் கண்விளக்க,
சிரித்து சிறைப்படுத்தும் சிறியாளின் செவிதழ்கள்,
அவள் முறைத்தாலும் வழக்கிழுக்கும்,
பல்வரிசை பதன்படுத்த,
மொழி திரட்டும் பல் இடுக்கில்,
பன்மொழியும் பழமொழிதான் !
இமை வலைந்து வழிவகுக்க,
அவ்விடங்காட்ட புள்ளியிட்டு,
சின்னஞ்சிறு கோலமது,
என்னை சிக்கவைக்கும் சிறுபொறிதான் !
கண்ணிமைக்கும் நொடியதினில்,
இவ்வனைத்தும் நான் கடக்க,
செந்தமிழின் விழித்திரைக்கு,
நானும் அந்நியன் தான் !
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக