ஈரத்துளிகளின் இசைவில் இசை சேர்த்து,
மூடிய சன்னலிற்சாய்ந்து மூடா கண்களோடு,
நகரும் நகரத்தில் கொஞ்சிக்குளவும் காதலுக்கு,
இச்சிறு துளியும் இச்சை தீர்க்கும் !
பறக்கும் தூசியை தன்பால் கவர்ந்து,
உருவான உறவாம் மண்ணில் சேர்த்து,
அவை சேர்ந்தநொடி கண்ணீராய் சேராகி !
உலர்ந்து மீண்டும் மேகமாகும் காதற்கரைப்பான் ~ மழை !
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக