இரவோடு உறவாடி, நிலவொளியின் குளிரளந்து ;
நிலவொலிந்த வேலையிலும், கண்ணிமைக்கா கைபேசி !
என் எழுத்தெல்லாம் அவளிருக்க;
அம்முகம்,
நிதனித்தம் நினைவிருக்க;
எழுந்தெழுந்து நான் கிறுக்க;
கசிவுண்ட பேனா முனை,
என் கண்கசிவை காணாதேனோ !
விடிந்தும் தூங்காமல்,
விதியென ஏங்காமல்,
என் சதியை காணாமல்,
வீழுந்திரந்து போனாலும்,
மண் மசைக்கும் முன்னாலே,
என்னை பெற்றவளின் கருநகலே,
உன் மடிகடத்தி நான் கிடக்க,
இடிகடந்து நீ இறைக்க,
என் உயிர் கடக்கும் ஒருநொடியும்,
ஒன்றான ஓர் நொடிதான் !
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக