முதல் காதலென நான் கிறுக்க,
கிறுக்கலில் உன் நகத்தடம் கீரிக்கிழிக்குமுன்,
வியர்த்து நின்ற ஒற்றை நொடியை இன்றும் நான் மறவேன் !
பிரித்து சிரித்தாயோ, சிரித்தே பிரித்தாயோ;
என்றறியும் முன்னமே என் முகவரி மாரிட,
ஆயிரம் கவிபடித்தும் உன் முதல்கவி என் கிறுக்கல்,
என்றெண்ணி நகர்ந்தாலும்,
தூரா மேகத்தில் துளியேற்றும் காற்றாய்,
காற்றற்ற அறையில் பறக்கும் காகிதமாய்,
நீரற்ற குடுவையில் கரையும் சிறுகல் நான் !
#வினித்_மணிமாறன்
காற்றற்ற அறையில் பறக்கும் காகிதமாய்,....this means a lot...one of the best scribble in the vinith manimaran blog...spr da nanba
பதிலளிநீக்கு